முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் வீரபாண்டியில் நடைபெற்றது
திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கை சுருக்கம்
திருவாரூர் மாவட்டம் திருக்குவளை என்னும் கிராமத்தில் முத்துவேலர் அஞ்சுகம் அம்மையார் ஆகிய தம்பதிகளுக்கு 1924 வது வருடம் ஜுன் 3ந் தேதியன்று மகனாக பிறந்தார்
எட்டாம் வகுப்பு வரை படித்த இவர் கதை திரைக்கதை வசனம் போன்ற சினிமா துறைகளிலும், எழுத்தாளர்களாகவும், மிகச் சிறப்பான முறையில் பணியாற்றி வந்துள்ளார். தனது 14 வயது முதல் சமூக பணிகளில் ஈடுபட்டு வந்த அவர் பல்வேறு போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளார். முரசொலி பத்திரிக்கையினை ஆரம்பித்த டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பின்னாளில் அந்த பத்திரிக்கையே திராவிட முன்னேற்ற கழகத்தின் பத்திரிகையாக உருவானது. தமிழ் திரைப்பட உலகில் நுழைந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் 1947ஆம் வருடம் ராஜகுமாரி என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகி கடைசியாக 2011இல் வெளியான பொன்னர் சங்கர் என்னும் திரைப்படத்தில் வசனகர்த்தாவாக அவர் எழுதியிருந்தார். தமிழ் திரையுலகில் வசனகர்த்தாவாகவும் எழுத்தாளராகவும் பணியாற்றியவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் பணியாற்றினார்.
ஆகஸ்ட் 7ஆம் தேதி 2018_ல் தனது 94 - வது வயதில் உடல்நலக்குறைவால் இந்த பூவுலகை விட்டு மறைந்தார்
இந்நிலையில் மறைந்த டாக்டர் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றினை மறவமாலும் , தமிழுக்கும் ,தமிழ்நாட்டிற்கும் செய்த நண்மைகள் ஏராளம். இதனால் டாக்டர் கலைஞர் கருணாநிதி செய்த பல நன்மைகளால் எண்ணற்ற தொண்டர்கள் இன்றளவும் இருந்து வருகின்றன அதனால் அவருடைய பிறந்த நாளினை எண்ணற்ற தொண்டர்கள் கொண்டாடி மகிழ்ந்து ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனார்.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்த நாள் விழாவில் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்
தற்பொழுது சாலை போக்குவரத்து அதிகமாக இருப்பதினால் விபத்துக்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன இதனால் ரத்தம் அதிகமாக தேவைப்படுகிறது .கர்ப்பிணி பெண்களுக்கும் ரத்தம் அதிகமாக தேவைப்படுவதால் இவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அனைவரும் பயன்பெறும் வகையில்
தேனி அருகே வீரபாண்டியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன்Ex. MP அவர்கள் தலைமையிலும் ,பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ,தேனி தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினசபாபதி முன்னிலையிலும் நடைபெற்றது
. மேலும் இந்த இரத்த தான முகாமில் ரத்த நாளங்களை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த சேகரிப்பு பிரிவு மருத்துவர் பிரியா தலைமையில் ரத்த மாதிரி சேகரிப்பு அலுவலர் கலையரசன் மற்றும் மருத்துவ செவிலியர்கள் ரத்த நாளங்களை சேகரித்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இந்த ரத்த தான முகாமில் வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு கவுன்சிலர்கள் திமுக பிரமுகர்கள் தன்னார்வலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்
மரக்கண்டுகள் நடும் விழா
. மேலும் இந்த இரத்த தான முகாமில் ரத்த நாளங்களை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த சேகரிப்பு பிரிவு மருத்துவர் பிரியா தலைமையில் ரத்த மாதிரி சேகரிப்பு அலுவலர் கலையரசன் மற்றும் மருத்துவ செவிலியர்கள் ரத்த நாளங்களை சேகரித்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இந்த ரத்த தான முகாமில் வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு கவுன்சிலர்கள் திமுக பிரமுகர்கள் தன்னார்வலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பாக உள்ள திட்ட வளாகத்தில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் தலைமையில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பின சரவணகுமார், தேனி நகர மன்ற தலைவர் ரேணுகா பாலமுருகன், துணை தலைவர் வக்கீல் செல்வம் ,
ஒன்றிய சேர்மன் சக்கரவர்த்தி ,பெரியகுளம் ஒன்றிய சேர்மன் மற்றும் மாவட்ட ,ஒன்றிய ,கவுன்சிலர்கள் ,நகராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கண்டு நடும் விழாவில் கலந்து கொண்டனர்
தேனி அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டியில் புதிய நியாய விலை கடை திறப்பு விழாவில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்செல்வன், சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், நகர்மன்ற தலைவர் ரேணுகா பாலமுருகன் ,துணைத் தலைவர் வக்கீல் செல்வம், நகராட்சி கவுன்சிலர்கள் கடவுள் உள்பட பல்வேறு கவுன்சிலர்கள் திறப்புவிழாவில் கலந்து கொண்டனர
தேனி பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவபடத்திற்கு
தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
மேலும் இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், தேனி நகராட்சி சேர்மன் ரேணுகா பாலமுருகன், துணைச் சேர்மன் வழக்கறிஞர் செல்வம், நகர்மன்ற கவுன்சிலர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட ஒன்றிய நிலை கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
.மேலும் அப்பகுதியில் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன இதேபோல் தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டியில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் கொடுவிலார்பட்டி திமுக கிளை சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் திமுகவின் கொடியேற்றியும் கொண்டாடினார்கள்
தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
மேலும் இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், தேனி நகராட்சி சேர்மன் ரேணுகா பாலமுருகன், துணைச் சேர்மன் வழக்கறிஞர் செல்வம், நகர்மன்ற கவுன்சிலர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட ஒன்றிய நிலை கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
.மேலும் அப்பகுதியில் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன இதேபோல் தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டியில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் கொடுவிலார்பட்டி திமுக கிளை சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் திமுகவின் கொடியேற்றியும் கொண்டாடினார்கள்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி