கண்டமனூர் அருகே கோவிந்த நகரத்தில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது
தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள கோவிந்தநகரத்தில் வருடந்தோறும் முக்கிய திருவிழாவாக வைகாசி மாதத்தில் நடைபெறும். முத்தாலம்மன் கோவில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம் .மேலும் கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் தொற்று காரணமாக முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெறவில்லை .இந்த கோயில் திருவிழா இந்த வருடம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது
கோவில் திருவிழா ஆரம்பம்
முதல்நாளில் முத்தாலம்மன் கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது ஊர் மந்தை பகுதியில் நடைபெற்ற இந்த கண் திறக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பின்பு பல நாட்கள் விரதம் இருந்து வைக்கப்பட் முளைப்பாரி நிகழ்வில்
சுவாமி ஊர்வலம்கோவிந்தநகரத்தில் உள்ள முக்கிய தெருக்களின் வழியாக வீதி உலா நடைபெற்றது முத்தாலம்மன் கண் திறக்கும் நிகழ்வு நடந்தவுடன் பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வருகை புரிந்து அருள்மிகு முத்தாலம்மன் சுவாமி திருத்தலத்திற்கு வந்தடைந்தது .பின்பு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தும் சிறப்பு அலங்காரம் செய்தும் பக்தர்களின் வழிபாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றன.
காலை 10 மணி அளவில் அருள்மிகு முத்தாலம்மன் கோவில் முன்பாக பெண்கள் வரிசையாக இருந்து பொங்கல் வைக்கும் திருவிழா நடைபெற்றது. மேலும் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது .மாலை 4மணி அளவில், அருள்மிகு முத்தாலாம்மன் திருக்கோவில் வைகாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அக்கினிச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது பக்தர்கள் பல நாட்கள் விரதமிருந்து பல்வேறு முக்கிய தெருக்களின் வழியாக அக்னி சட்டி எடுத்து அம்மனிடம் சென்று நேர்த்தி கடன் காணிக்கைகளை செலுத்தினார்கள்
மாலை 5 - 30 மணிக்கு மேல் அருள்மிகு முத்தாலம்மன் பக்தர்களின் பிரியா விடையாக பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது அதேபோல் விவசாயம் செழிப்பதற்கு முத்தாலம்மன் வைகாசி திருவிழாவில் பல நாட்கள் விரதமிருந்து வைக்கப்பட்ட முளைப்பாரிகளை வரிசையாக தாய்மார்கள் கொண்டுவந்து வைகை ஆற்றங்கரையினை கடந்து அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் முளைப்பாரிகளை கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
.மேலும் இந்த வைகாசி மாத முத்தாலம்மன் திருக்கோவில் திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி