Type Here to Get Search Results !

தனியார் பள்ளிகளில் இலவசமாக மாணவர்களை சேர்க்க வேண்டுமா? 2023-2024 ஆம் வருடத்திற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு

தனியார் பள்ளிகளில் இலவசமாக மாணவர்களை சேர்க்க வேண்டுமா? 2023-2024 ஆம் வருடத்திற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு

தமிழகத்தில் கல்வி உரிமை சட்டத்தின்  2009  கீழ் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டில் இயங்கும் சுயநிதி தனியார் பள்ளிகளில் படிப்பதற்காக புதிதாக சட்டம் இயற்றப்பட்டது அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் இலவசமாக படிப்பதற்காக ஆணைஇயற்றப்பட்டது. இதனால் ஏழை எளிய மக்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிப்பதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பம் அளித்து பயன் பெற்றுள்ளனர்


இந்நிலையில் தற்பொழுது பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் 25% அடிப்படையில் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் கடந்த ஆண்டு 74ஆயிரத்து 283 மாணவர்கள் தனியார் "பள்ளிகளில் படித்து பயனடைந்த நிலையில்

இந்த வருடம் வருகின்ற மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை புதிதாக மாணவர்களை தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான பதிவு ம நடைபெறுகிறது .மேலும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க விருப்பம் உள்ள பெற்றோர்கள் உடனடியாக கீழே கொடுக்கப்பட்டு உள்ள இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளித்து பயன் பெறலாம்

https://rte.tnschools.gov.in/

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.