தேனி அருகே உழவன் செயலி பற்றி விழிப்புணர்வு
தேனி அருகே கொடுவிலார்பட்டி மற்றும் பல்வேறு இடங்களில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்
தேனி அருகே கொடுவிலார்பட்டி பகுதியில் மதுரை வேளாண் கல்லூரியை சேர்ந்த இளங்கலை நான்காம் ஆண்டு மாணவிகள் சார்பில் அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் உழவன் செயலி, டிரைகோடெர்மா விரிடி விதை நேர்த்தி, தென்னை வேர் ஊட்டம், விளக்குப் பொறி ஆகியவற்றினை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
அதனை தொடர்ந்து தாடிச்சேரி, கோவிந்த நகரம், உப்பார்பட்டி கிராம பகுதியில் உள்ள விவசாயிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்வில் ரம்யா,ரவணியா, சம்வர்திகா, ராஜா ஸ்ரீ ஆகிய மாணவிகள் விவசாயிகளுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்திய நிகழ்வில் விவசாயிகள் பங்கேற்று பயன் பெற்றனர்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி