Type Here to Get Search Results !

தேனி அருகே நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்

தேனி அருகே நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்த மாவட்ட காவல்  துணை கண்காணிப்பாளர்


தேனி அருகே வீரபாண்டியில் சிலம்பம் பாண்டி பயிற்சி பள்ளி சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி தலைமையேற்றி நடத்திய இந்த சிலம்பாட்டப் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர் மேலும் இரண்டு வயது முதல் 12 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்றனர் இந்த போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு தேனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் ,ஆயுதப்படை காவல் துணைகண்காணிப்பாளர் இளமாறன் ஆகியோர்  பங்கேற்று பரிசுகளையும் பாராட்டு சான்றிதழையும் பதக்கங்களையும் வழங்கி சிறப்பித்தனர்

தேனி காவல் துணைக்கண்கணிப்பாளர் கூறும் பொழுது


தற்பொழுது உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு   சிலம்பம் பயிற்சி குதிரை ஏற்றம் துப்பாக்கி உள்ள அனைத்து  பயிற்சிகளையும் கொடுத்திருப்பார்கள்.இந்த பயிற்களுக்கு  இணையாக சிலம்பம் பயிற்சி விளங்கி வருகிறது . மேலும் இந்த சிலம்பம் சுற்றில் இருந்து மட்டற்ற கலை வல்லுனராக இருக்கும்  நம் கவிதா அவர்களே பாராட்டுவது மிக முக்கியம், பெண்ணை போற்றுவோம் பெண் குளத்தை போற்றுவோம் பெண்நிலை உயர்த்துவோம் என்று சொல்வார்கள் ஆணுக்கு நிகராக பெண்ணையும் இந்த சிலம்பத்தில் களம் இறக்கி வெற்றி கண்டிருக்கிறார் என்றால் சிலம்பம் பாண்டியனுடைய செயல்பாடு மிக மிக பாராட்டத்தக்கது இந்த விழாவிற்கு வந்து சார் சொன்னாங்க இந்த விழாவில் பங்கெடுக்காமல் வேறு எந்த விழாவில் பங்கெடுப்பது நம் தேசத்தினுடைய தலைவராக இருந்த மேதகு அப்துல் கலாம் ஐயா சொல்வார்கள்  லட்சிய கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் என்ற வரிகளுக்கு ஏற்ப நம் இந்திய தேசத்தின் முதுகெலும்புகளாக இருக்கும் லட்சியத்தை சுமந்து இருக்கும் அன்பு மாணவ செல்வங்கள் உங்களை பார்ப்பது தான் மிக மட்டற்ற மகிழ்ச்சி. தேனி மாவட்ட அளவில் தமிழக அளவில் இடம்பெற்று பரிசு பெற்றிருந்தால் மாநில விளையாட்டு ஆணையரகத்தின் மூலமாக நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளில் சர்டிபிகேட் வாங்கினாலும், மத்திய   மாநில அளவில்  விளையாட்டில் சர்டிபிகேட் வாங்கினாலும் அகில இந்திய அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில்  பங்கு எடுத்தாலும்  இந்த விளையாட்டில் சிறந்த மாணவனாக வந்தால் கல்வித்துறையில் அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வந்து வேலை வாய்ப்பு கல்வி பயில்வதற்கு வாய்ப்பு உண்டு. 


எல்லாரும் சிறந்த விளையாட்டு வீரர்களாக வந்தால் மருத்துவத்துறையாகட்டும் பொறியியல் துறையாக இருக்கட்டும் இந்த விளையாட்டு துறையில்  சிறந்த மாணவனாக சான்றிதழ் பெற்றிருந்தாலே போதும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் , சிலம்பம் போட்டியானது மாநில விளையாட்டு ஆணையரங்கம் அல்லது இந்திய விளையாட்டு ஆணையராகம் இந்த ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா தமிழ்நாடு சொல்லுவாங்க அதுல இந்த விளையாட்டெல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளது விளையாட்டு துறைக்கு சிறப்பு காலம் கொடுத்து ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கிறார் இந்த குறுகிய காலத்தில் மிக அதிக அளவில் விளையாட்டுகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நிறைய நிதி ஒதுக்கி கொண்டிருக்கிறார்கள். அந்த நிதிகள் எல்லாம் நாம் பயன்படுத்தி உடல் வலிமைக்காகவும் மனவலிமைக்காகவும் விளையாடுவது மட்டுமில்லாமல் வேலை வாய்ப்புக்காகவும்  நாம் வாழ்க்கை வளம் பெறுவதற்காகவும் இதை விளையாட்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மிகவும் அன்போடு உங்களை வாழ்த்துவதிலும் நான் கடமைப்பட்டுள்ளேன்

  இது போன்ற வாய்ப்புகள் எல்லாம் மாணவர்கள் பங்கேற்ற உற்று துணையாகவும் வழிகாட்டலாம் இருக்கக்கூடிய இந்த பெற்றோர்களை எல்லாம் நான் வணங்குவதில் கடமைப்பட்டு இருக்கின்றேன் இந்த பெற்றோர் பெருமக்களை மீண்டும் ஒருமுறை வணங்கி பாராட்டுகிறேன் .நமக்கு தெய்வங்களாக  விளங்கும்  தாய் தந்தைகளை  பாருங்க எவ்வளவு உற்சாகம் எடுத்து இந்த சிலம்பம் பயிற்சில நம்மள சேர்க்கணும் நம்முடைய குழந்தைகள் அறிவு பெற வேண்டும் உடல் வலிமை பெற வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கும் பெற்றோர்களை வாழ்த்துவோம் ,  விளையாட்டு இல்லாம இருந்த இந்த செல்போனில் டிவிக்கு இருந்து மாறி குழந்தைகளின் எண்ணங்கள் மாறி விடுகிறது .விளையாட்டு , சிலம்பம் போன்றவற்றில் மாணவர்கள் பங்கு பெற்றால்  திசை மாறி தீய எண்ணங்களை  தடுப்பதற்கும், அறிவு சிந்தனையை கொண்டுவதற்கும் விளையாட்டு மிகவும் அவசியம் என்பதை புரிந்து கொண்டு நாம் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் .விளையாட்டோடு கல்வியிலும் கவனம் செலுத்தி நம் இந்திய தேசத்தின் வளர்ச்சியின் முதுகெலும்பாக நாம் இருக்க வேண்டும்.  இந்த விழாவிற்கு வந்து தலைமை தாங்கி இருக்கும் பேரூராட்சி தலைவர் கீதா சசி அவர்களுக்கு  நான் உண்மையிலேயே நன்றி கூற கடமைப்பட்டு இருக்கின்றேன். ரெண்டு மூணு பங்ஷன் பார்த்ததில் , பொது வேலை, சமூகம் சார்ந்த வேலை அவங்களுடைய பணி சார்ந்த வேலை அந்த வேலையிலிருந்து விலகி ஞாயிற்றுக்கிழமை மாணவர்களுக்காக நேரம் ஒதுக்கி  கணவன் மனைவி ரெண்டு பேரும் எவ்வளவு அழகாக செயல்படுகிறார்கள் என்றும் இந்த செயல்பாட்டினால் உற்சாகம் அளிக்கிறார்களால் இதனால் அவர்களையும்  நன்றி கூற கடமைப்பட்டு இருக்கின்றேன் .இந்த மாணவர்களை உற்சாகப்படுத்துவதற்கும்  சிலம்பம் பாண்டியர் அவர்களுக்கும் இந்த குழுவினர்களுக்கும் அனைத்து விளையாட்டு வீரர்களின் சார்பாக என் வாழ்த்துக்களையும் நன்றியையும் கூடிக் கொண்டு விடைபெறுகிறேன் நன்றி வணக்கம் என்று கூறினார் 

தேனி ஆயுதப்படை காவல்துணை கண்காணிப்பாளர்


இந்த இனிய விழாவிற்கு வருகை புரிந்து இருக்கும் மாணவ செல்வங்களுக்கும் மற்றும் பெற்றோர்கள் மற்றும் விழாவை தலைமையற்றிருக்கும் நமது வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் திரு தங்கை கீதா அவர்கள் மற்றும் சசி அவர்களுக்கும் காவல்துறை கண்காணிப்பாளர் திரு பார்த்திபன் சார் அவர்களுக்கும் என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் . இந்த விளையாட்டு போட்டியில் ஆர்வம் எனக்கும் அதிகம் உண்டு .இதுல நம்ம பிள்ளைகளையும் நல்ல எண்ணத்துல அவங்கள பயிற்சிக்கு நான் சேர்த்து இருக்கேன் இது என்னோட தனிப்பட்ட ஆரோக்கியத்தினால் என்ஜாய் பண்ணனும் .வேலை வாய்ப்பு மற்றும் அனைத்து துறைகளிலும் விளையாட்டு போட்டியில் கலந்துகிறதே பெரிய பரிசு .


இது மாதிரி திறமையான குழந்தைகள் பயிற்சி எடுத்து தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினார்கள் இதை பார்க்கும் பொழுது எதிர்காலத்தில் இவர்கள் நல்ல முன்னேற்றத்திற்கு வருவார்கள். பெற்றோர்கள் இது மாதிரி அவர்களை மேலும் மேலும் நல்ல பயிற்சிகளை அனுப்பி அவர்களை என்கரேஜ் பண்ணி உறுதுணையாக இருந்து எதிர்காலத்தில் அவர்களுக்கு நல்வழி காட்டுவது என்று நம்புகிறோம் .இந்த மாவட்டத்தை பொருத்தவரைக்கும் அனைத்து இடங்களிலும் இந்த சிலம்பு நடத்தி வரும் பாண்டியின்  மகன் கண்ணன் ஒரு காவலருக்கு தேர்வாகியிருக்கிறார் அவருடைய பெண் குழந்தை அவர்களும் சிலம்பம் போட்டியில் அதிக ஈடுபட்டு நல்ல முறையில் அவர் சிலம்பத்தில் பயிலும் குழந்தைகளையும் நல்ல முன்னேற்றத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் அதே போல்அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளுக்கு நல்ல ஊக்குவித்து நல்ல அறிவுரை கூறிய சில விளையாட்டு போட்டிகளை என்கரேஜ் பண்ணுவதற்கு காவல்துறை சார்பாகவும் மற்றும் பொதுமக்கள் சார்பாகவும் நான் என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்

வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் 


மேலும் இந்த சிலம்பாட்ட போட்டியில் தலைமை ஏற்று நடத்திய வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி கூறும் பொழுது மாணவர்கள் அனைவரும் விளையாட்டு துறையில் சாதித்து வெற்றி நிலை பெற வேண்டும் என்றும் இந்த சிலம்பப் பயிற்சி பள்ளியானது தற்பொழுது ஆரம்பித்து அனைத்து குழந்தைகளுக்கும் வழிகாட்டியாக திகழ்கிறது என்றும் தாங்களும் இது போன்ற பயிற்சி எடுக்காமல் இருப்பது தங்களுக்கு வருத்தம் அளிக்கிறது என்றும் தங்களுக்கும் இந்த பயிற்சியை மேற்கொண்டால் மிக மகிழ்ச்சியை தரும் என்றும் கூறினார்



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.