Type Here to Get Search Results !

கிராம ஊராட்சிகளில் புதிய செயல்பாடு அறிமுகம்

கிராம ஊராட்சிகளில் புதிய செயல்பாடு  அறிமுகம் 


மத்திய மாநில அரசு சார்பில் காகித பயன்பாட்டினை படிப்படியாக தற்பொழுது குறைத்து வருகிறது . மேலும் இந்த காகித பயன்பாட்டினை  குறைக்கும் வகையில் ஆன்லைன் பண பரிமாற்று முறையை மத்திய மாநில அரசுகள் தற்போது செயல்படுத்தி வருகின்றன. இதே போல் மத்திய மாநில அரசு அலுவலகங்களில் பல்வேறு பயன்பாட்டிற்காக ஆன்லைன் மூலமாக மட்டுமே பணம் வரவு செலவு வைக்கப்பட்டு வருகிறது .இதே போல் நகராட்சி மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சொத்து வரி, குடிநீர் வழி ,உட்பட பல்வேறு வரிகளை செலுத்துவதற்கு ஆன்லைன் மூலமாக செலுத்தப்பட்டு வருகிறது. இதே போல் தற்பொழுது அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சொத்து வரி ,குடிநீர் வரி வீட்டு வரி ,தொழில் வரி ,உட்பட பல்வேறு வரிகளை ரசீது மூலம் செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்பொழுது தமிழக அரசின் அறிவிப்பு அனைத்து வரிகளும் பணவரத்தனையில்  ஆன்லைன் மூலமாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது இதனால் ஆன்லைன் மூலம் வேலைப்பாடுகளும் அதிகரிக்காமல் மிகவும் பயனுள்ளதாகவும் அமைகிறது.


 இந்நிலையில் இன்று முதல் 22/5/2023 திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஆன்லைன்  மூலம் பணவர்த்தனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .இதனால் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று முதல் ஆன்லைன் மூலம் பணவரத்தனை  செயல்படும் என்றும் அரசு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது


குடிநீர் வரி, சொத்து வரி , வீட்டு வரி  உட்பட பல்வேறு வரிகளை tnrd.tn .govt.in  என்ற இணையதள மூலமும் புதிதாக வீடுகள் கட்டுவதற்கான அனுமதி சான்றினை பெற onlineppa.tn.govt.in என்ற இணையதளமும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.