பூனை குறிக்கே வந்தால் அபசகுனமா இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்
ஆதி காலத்திலிருந்து மனித இனம் மருத்துவம் ,கல்வி ,விஞ்ஞானம் மற்றும் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்து வளர்ந்து வந்துள்ளன .தற்பொழுது தொழில் ரீதியாகவும் அடிப்படை வசதிகளுக்காகவும் மனிதர்கள் தொழில்நுட்ப கருவிகளை வைத்து வேலைக்காக பயன்படுத்தும் நிலை மாறியும் ,தற்பொழுது அனைத்தும் தொழிற் சாலைகள் இயந்திரங்கள் மூலம் பல்வேறு பணிகளை செய்வதற்கு தற்பொழுது தயார் படுத்தி வருகிறோம். மனித இனம் பல்வேறு வளர்ச்சி பணிகளில் வளர்ந்து விட்டால் கூட இன்றுவரை நாம் ஒரு இடத்துக்கு செல்லும் போதும் ஒரு காரியம் செய்வதற்கு முன் நல்ல நேரம் பார்போம் .ஜாதகம் ,ஆன்மீகம் பல்வேறு வழிகளில் இன்று வரை நாம் கடைபிடித்து ஒரு செயலை செய்ய வேண்டும் என்றால் நம் நல்ல நேரத்தை பார்த்தும் பல்வேறு சாஸ்திர சம்பிரதங்களை பார்த்து அந்த வேலையினை செய்வதற்கு முன் நாள் குறித்து ,குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்வதற்கு பல்வேறு முயற்சிகளையும் தற்போது வரை மனித இனம் செயல்படுத்தப்பட்டு வருகின்றனர். நாம் வீட்டிலிருந்து கிளம்பும்போதும் அல்லது வேறொரு இடத்தில் இருந்து செல்லும்போதும் பூணை இடையில் சென்றால் நாம் அபசகுணம் என்று எண்ணிவிட்டு உடனடியாக சிறிது நேரம் நின்று விட்டோ அல்லது வீட்டில் இருந்து கிளம்பும் பொழுது பூனை வந்து விட்டால் தண்ணீர் குடித்துவிட்டு சில மணிநேரம் அமர்ந்து விட்டு நாம் செல்கின்றோம் இதற்கான காரணங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்
தற்பொழுது நாம் அன்றாடம் போக்குவரத்துக்காக இரண்டு சக்கர வாகனம், பேருந்து ,ரயில் ,விமானம் மற்றும் பலதரப்பட்ட இயந்திரங்களால் உருவாக்கப்பட்ட போக்குவரத்தினை நாம் பயன்படுத்தி வருகின்றோம். மேலும் இரவு நேரத்தில் செல்லும் பொழுது இந்த வாகனங்களில் வெளிச்சம் அடிப்பதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமால் இருக்க வாய்ப்புள்ளது .ஆனால் பழங்காலத்தில் இந்த வாகனப் போக்குவரத்துக்கள் அனைத்தும் இல்லாமல் இருக்கும் நேரத்தில் நம் முன்னோர்கள் அனைவரும் கால்நடைகளை பயன்படுத்தியது அனைவருக்கும் தெரியும். அதாவது குதிரை வண்டி மாட்டு வண்டிகள் பயன்படுத்தி வந்துள்ளனர் .நீண்ட தொலைவில் சொல்லும் போது நம் முன்னோர்கள் மாட்டு வண்டிகளிலும் குதிரை வண்டிகளிலும் நாள் கணக்கில் சென்று கொண்டே இருப்பவர்கள் .பகல் இரவு என்று பார்க்காமல் தினசரி போக்குவரத்தை தொடங்குவதனால் இரவு நேரங்களில் பல கிலோமீட்டர் தொலைவில் மாட்டு வண்டிகளிலும் குதிரை வண்டிகளிலும் நம் முன்னோர்கள் சென்றுள்ளனர். அப்பொழுது மாடுகளுக்கும் குதிரைகளுக்கும் எதிரே வரும் நபர்களை பார்த்து விட்டால் கூட மாடுகளுக்கும் குதிரைகளுக்கும் ஒரு சில உயிரினங்கள் வரும் பொழுது பயத்தை உண்டாக்கி உள்ளது .அதாவது இரவு நேரங்களில் நீண்ட தொலைவில் சொல்லும் பொழுது பூனையும் எதிர் பக்கத்தில் இருந்து வரும் பொழுது பூனைகளின் கண்கள் அனைத்தும் ஒளிரும் தன்மை கொண்டது இதனை குதிரைகளும் மாடுகளும் பார்த்து மிரண்டு போய் இருக்க இல்லாமல் வேண்டும் என்ற காரணத்தால் சிறிது நேரம் நம் முன்னோர்கள் பூனையை பார்த்தவுடன் சில நேரம் ஓய்வு எடுத்துவிட்டு தண்ணீர் குடித்துவிட்டு செல்வார்கள் .இதே போல் நாளடைவில் தினசரி நடந்து வந்த நிலையில் இன்று வரை மனித இனம் பூனைகள் குறுக்கே வந்தால் அபசகுணம் என்று நினைத்து விட்டு தண்ணீர் குடித்துவிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்து சென்று வருகிறார்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் பூனைக்கும் அபசகுனத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது .நம் மனதில் உறுதியுடன் எந்த ஒரு செயலையும் செய்யும் பொழுது நாம் செல்லும் பொழுது மன தைரியம் இருந்தால் அனைத்து காரியங்கலும் வெற்றி அடையும் என்று நினைத்து விட்டு நம் அபசகுணங்களை பார்க்காமல் செய்திட வேண்டும் .மனதில் உறுதியுடன் செயல்பட்டால் அனைத்து காரியங்களையும் வெற்றி அடையும் என்று நம் அனைவரும் அறிந்து செயல்பட வேண்டும்.
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி