தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காணமால் போன 15.6 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்த டி ஐ ஜி.
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி , கடமலைக்குண்டு , வருசநாடு, அல்லிநகரம், போடி சின்னமனூர் கம்பம் தேவதானப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ளன இந்நிலையில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக செல்போன்கள் காணவில்லை என்று புகார் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து தேனி மாவட்ட சைபர் செல் சார்பு ஆய்வாளர் உமாதேவி தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களில் கண்டுபிடித்த சுமார் 15 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 156 செல்போன்களை தேனி மாவட்டகாவல் கண்காணிப்பாளர்அலுவலகத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி அபினவ் குமார் பங்கேற்று செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
இந்த நிகழ்வின் போது தேனி மாவட்ட எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் ,பெரியகுளம் டிஎஸ்பி கீதா ஆகியோர் உடன் இருந்தனர்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன 512 செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் காவல் துறை சார்பில் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் காணாமல்போன செல்போன்களை உடனடியாக கண்டுபிடித்து தந்த காவல்துறையினரை தேனி மாவட்ட பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி