மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உடனே மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய மாநில அரசு சார்பில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்வி விளையாட்டு உட்பட பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது .இதே போல் தமிழக அரசு சார்பிலும் பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களையும் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வு என்ற தேர்வு மூலம் தேர்வு எழுதி அதில் தேர்வாகும் மாணவர்களுக்கு 9 ,10 ,11 ,12 ஆகிய வகுப்புகள் படிக்கும் வரை மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்படும் இந்த திட்டங்களால் பள்ளி மாணவர்கள் இடையில் நிற்காமால் கல்வி படிப்பினை தொடர பள்ளியில் படிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது
மேலும் பள்ளி மாணவர்கள் பள்ளி படிப்பினை மட்டும் படித்துவிட்டு நிற்காமல் இருப்பதற்காக கல்லூரி படிப்பையும் தொடர்ந்து படித்திட கல்லூரியில் சேரும் வகையில் தமிழக அரசு சார்பில் புதிய அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் எந்தெந்த மாணவர்கள் பங்கேற்று தகுதி பெறலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையின் மூலம் படித்து பயன்பெறலாம்
பள்ளி மாணவர்கள் உயர்கல்வியினை படிப்பதை உக்கி விற்கும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதலமைச்சர்திறனாய்வு தேர்வு என்ற தேர்வினை இந்த கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அரசு பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் ஒன் படிக்கும் மாணவர்கள் முதலமைச்சர் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அதில் தேர்வு செய்யப்படும் 500 மாணவிகள் 500 மாணவர்களுக்கு 2023 -2024 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்றும் இளங்கலை படிப்பு வரை ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்க கடைசி நாள்
செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் இந்த தேர்வுக்கு வருகின்ற 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பங்களைwww.dge.tn.gov.inஎன்றஇணையதளமுகவரிக்கு சென்று விண்ணப்பங்களைபதிவிறக்கம் செய்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருகின்ற 18 ஆம் தேதிக்குள்விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணமாக ரூபாய் 50 ரூபாய்பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
வினாக்கள் எப்படி கேட்கப்படும்
முதலமைச்சர் திறனாய்வு தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் தமிழக அரசின் 9 மற்றும் பத்தாம் வகுப்பில் உள்ள கணிதம் சமூக அறிவியல் அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டத்தின் கீழ்இரண்டு தாள்களாக இந்த தேர்வு நடத்தப்படும் என்றும் ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் இடம்பெறும் என்றும் முதல் தாளில் கணிதமும் இரண்டாம் தாளில் அறிவியல் சமூக அறிவியலும் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு நேரம்
முதலமைச்சர் திறனாய்வு தேர்வானது செப்டம்பர் மாதம் 23ம் தேதி அன்று நடைபெறும் என்றும் காலை 10 மணி முதல் 12 மணி வரை ஒரு தேர்வும், 2 மணி முதல் 4 மணி வரை ஒரு தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மாணவர்களே இந்தச் திட்டத்தில் அனைத்து மாணவர்களும் பங்கேற்று தேர்வு எழுதி வெற்றி அடைந்து பயனடையலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி