Type Here to Get Search Results !

400 ஆண்டுகள் பழமையான கண்டமநாயக்கனூர் ஜமீன் கோட்டைகருப்பசாமி வருட அபிஷேகத்தின் வரலாறு

 400 ஆண்டுகள் பழமையான கண்டமநாயக்கனூர் ஜமீன் கோட்டைகருப்பசாமி வருட அபிஷேகத்தின் வரலாறு  

பண்டை காலத்தில் மன்னர்கள் ஆட்சி செய்த பகுதிகளை பாளையங்கள் என்று கூறி உள்ளனார் . சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு இடங்களில் 72 பாளையங்கள் அமைத்து  ஜமீனாக மாற்றப்பட்டு ஜமீன் ஆட்சி நடைபெற்றது.


இந்த ஜமீன் ஆட்சியில் ஒரு குறிப்பிட்ட எல்லையினை ஜமீன்தார்கள் ஆண்டு வந்துள்ளனர் . இந்த ஜமீன்தார் ஆண்டதில் முக முக்கிய ஜமீனாக கண்டமனூர் ஜமின் அமைந்துள்ளது .

மேலும் 72 பாளையங்களில் கண்டமனூர் ஜமின் அதிக பரப்பளவு இருந்துள்ளது. இந்த கண்டமனூர் ஜமீனின் முதல் ஜமீனாக வேலப்ப நாயக்கர் முதல் ஜமீனாக கருதப்படுகிறார்.

வேலப்ப நாயக்கருக்கு  அடுத்த படியாக அவருடைய வாரீசுகள்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருந்த நிலையில் வேலப்ப நாயக்கருக்கு வாரீசுகள் இல்லை என்ற காரணத்தால் அவருக்கு அடுத்தப்படியாக அவருடைய தம்பி ஆண்டி வேலப்ப நாயக்கர் 18|7 முதல் 1830 வரை ஆண்டு வந்துள்ளார்

.இதனால் கண்டமனூர் ஜமீனை வாரிசு அடிப்படையில் கொண்டம நாகம நாயக்கரும்  ,அவருடைய வேலப்ப நாயக்கரும் ஆண்டு வந்துள்ளனர். இப்படிப்பட்ட ஜமீனின் காவல் தெய்வமாக இருப்பவர் கோட்டை கருப்பசாமியாகும் .பல கிலோ மீட்டருக்கு காவல் தெய்வமாக கருதப்படும் இந்த கோட்டைகருப்பசாமி கோவில் கட்டப்பட்ட சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கதலி நரசிங்க பெருமான் கோவில், வேலவர் கோவில் இந்த கால கட்டங்களில் கருப்புசாமி கோவில் கட்டப்பட்டுள்ளது.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலானது தற்பொழுது உள்ள தலைமுறையினர் கேவிலினை  புனரமக்கப்பட்டு கும்பா அபிஷேகம் வைத்து ஒவ்வொரு ஆண்டும் வருட அபிஷேகம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த வருடம் (23-8- 2023 ) நடந்த வருட அபிஷேகத்தினை இந்த கட்டுரையில்  புகைப்படங்களுடன் காணலாம்.


இந்த வருடம் நடைபெற்ற நிகழ்வில் முதலில் திருக்கோவிலில் முகூர்த்த கால் ஊண்டும் நிகழ்ச்சியுடன் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. இரண்டாம் நாளான  புதன்கிழமையில்   நடைபெற்ற நிகழ்வில்  முதலில் பாலசுப்பிரமணியர் கோவிலில் பால்  தீர்த்தம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து இந்த திருக்கோவிலில்  சிறப்பு பூஜைகளும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன.


இந்தபாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் இருந்துதேவராட்டங்களுடன் பாலசுப்பிரமணியர் கோவில்,ஜல்லிக்கட்டு தெரு அரண்மனை தெரு ,உட்பட கண்டமனூர் நகரில் முக்கிய தெருக்களின் வழியாக பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.


தொடர்ந்து பல நாட்கள் விரதம் இருந்து கொண்டுவரப்பட்ட பால்குடங்களில் கோட்டை கருப்புசாமிக்கு பக்தர்களின் பத்தி கோசங்களுடன் பால் அபிஷேகம் செய்யப்பட்டது மேலும் இளநீர் பன்னீர் தேன் பஞ்சாமிர்தம் சந்தனம் உட்பட பல்வேறு அபிஷேகங்களும் நடைபெற்றன இந்த சிறப்பு அபிஷேகங்களை தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன

இந்த சிறப்பு பூஜையில் தேனி கண்டமனூர் பொன்னம்மாள் பட்டி வேலாயுதபுரம் ராமச்சந்திரபுரம் கடமலைக்குண்டு அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர் இந்த விழாவினை முன்னிட்டு தேவராட்டமும் கும்மியாட்டமும் நடைபெற்றது அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.