458 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு
ஆசிரியர் பணியிடங்களுக்காக காத்திருக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும் வகையில் ராணுவ பள்ளி சார்பாக புதிய அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது இந்த அறிவிப்பில் புதியதாக 458ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் புதியதாக சேர்வதற்கான ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .
ராணுவ பள்ளிகளில் 458 பணிகளை நடத்துவதற்காக AWES சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கு தேர்வு எழுதும் மையங்களாக தமிழகத்தில் சென்னை கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதி அன்று200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும் இந்த தேர்வில் நெகட்டிவ் மார்க் உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த ஆசிரியர் பணிகளுக்கு விருப்பமும் தகுதி உள்ள நபர்கள் உடனடியாக கீழ்க்கண்ட இணையதளம் முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்றும் மேலும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ராணுவ பள்ளியில் ஆசிரியர் பணி இடங்களுக்கு சேருவதற்கான விண்ணப்பங்களை https://ost.awes.cbtexamportal.in/#/login
என்ற இணையதளம் முகவரிக்கு சென்று விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி