Type Here to Get Search Results !

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குறித்து ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குறித்து ஆட்சியரின் முக்கிய  அறிவிப்பு



தமிழகத்தில் காவல்கண்காணிப்பில் ஈடுபட காவலர்கள் தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு சீருடைபணியாளர தேர்வாணயம் உருவாக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் காவலர்களை தேர்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுத்துறை மூலம் தற்பொழுது இரண்டாம் நிலை சிறை காவலர்கள் ,இரண்டாம்நிலை காவலர்கள் தீயணைப்பாளர்கள் என 2576 (ஆண்கள் , 789 பெண்கள் என மெத்தம் 3359 காவலர்கள் தேர்வு செய்ய பட உள்ளனர். இந்நிலையில் முன்னாள் படை வீரர்கள் சிறப்பு ஒதிக்கிட்டின்படி 5% ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா  வெளியிட்ட அறிவிப்பில்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம்  நிலை காவலர் ஆயுதப்படை மற்றும்இரண்டாம் நிலை சிறை காவலர் தீயணைப்பாளர் என மொத்தம் 3359இடங்களுக்கு காவலர்கள் தேர்வு செய்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றும் ,இதில் முன்னாள் படை வீரர்கள் ஐந்து சதவீத இட ஒதுக்கீடு அதாவது 129 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும்
இந்த பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ள முன்னாள் படை வீரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று 18- 8 2023 முதல் 17 - 9-2023 வரை விண்ணப்பிக்கலாம் என்றும்.வயது வரம்பு மற்றும் பிற தகுதிகளையும் அறிய மேற்கண்ட இணையதள முகவரிக்கு சென்று பார்த்து பயன்பெறலாம் என்றும் இந்த அறிய வாய்ப்பினை முன்னாள் படை வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா தெரிவித்துள்ளார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.