மாணவர்கள் கடிதம் எழுதினால் ரூபாய் 50 ஆயிரம் பரிசு
கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஒரு தகவலினை பல கிலோமீட்டர் உள்ள பகுதிகளுக்கு சொல்ல வேண்டும் என்றால் தபால் மூலம் அனுப்பி நான்கு தினங்கள் ,இரண்டு தினங்கள் ,மறுநாள் என்று நாள் கணக்கில் அந்த தகவல் சென்றடையும் நிலை இருந்து வந்தது. காலப்போக்கில் விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் தொழில் நுட்பங்களின் வளர்ச்சியால் கனிப்பொறி உதவியுடன் பல்வேறு வகையான வளர்ச்சிகள் ஆன்லைன் மூலமாக வந்துள்ளன. தற்பொழுது தொலைபேசி, செல்போன் இன்டர்நெட் என்று பல்வேறு தொழில்நுட்பங்கள் ஒரு தகவலை ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள நபர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றால் அடுத்த நொடியில் தகவல் கிடைக்கும் அளவிற்கு கைப்பேசி மூலம் தெரிவித்து விடுகிறார்கள்.
டிஜிட்டல் இந்தியா
இந்நிலையில் தபால் போன்ற பழங்கால தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் புதிய இந்தியாவுக்கான டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது மேலும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் நபர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இன்லாந்த் லெட்டரில் எழுதும் நபர்கள் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும் கடிதத்தின் உரை பிரிவில் எழுதும் நபர்கள் 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் எழுதி கீழ்காணும் முகவரிக்கு குறிப்பிட்ட நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்
யார் யார் பங்கேற்கலாம்
மேலும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் 18 வயது உட்பட்டவர்கள் கண்டிப்பாக பிறப்பு சான்றிதழ் நகல் இணைத்து அனுப்ப வேண்டும் என்றும்
இந்தப் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெறும் முதல் நபருக்கு ரூபாய் 25,000 /இரண்டாவது நபருக்கு பத்தாயிரமும், மூன்றாம் இடம் பிடித்த நபருக்கு ரூ 5000 பரிசு வழங்கப்படும்
மேலும் தேசிய அளவில் வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 50,000 இரண்டாம் பரிசாக ரூபாய்25,000 மூன்றாம் பரிசாக ரூபாய் பத்தாயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்தப் போட்டியில் பொதுமக்கள் மாணவர்கள் என அனைவரும் பங்கேற்கலாம் என்றும்
இந்த கடிதமானது தமிழ் ஆங்கிலம் ஹிந்தி என்று ஏதாவது மொழியில் எழுதிஅனுப்பி வைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது
விபரங்கள் அறிய
முதன்மை தபால் துறை தலைவர் ,தமிழ்நாடு வட்டம் சென்னை 600002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும்
மேலும் விபரங்களுக்கும் விதிமுறைகளை பற்றியும் ஆலோசனைகளைப் பெற 9443139982 9443139982என்ற தொலைபேசி எண் மூலம் சந்தேகங்களை கேட்டறியலாம் என்றும் கோட்டப் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி