பழங்களை சாப்பிடுவது போன்று கனவில் வந்தால் என்ன பலன்கள்
சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை நாம் இரவில் தூங்கும் பொழுதும் பகலில் தூங்கும் பொழுதும் கனவு வருவது வழக்கமாக இருந்து வருகிறது மேலும் ஒரு சில கனவுகள் மகிழ்ச்சியை அளிக்கும் விதமாகவும் ஒரு சில கனவுகள் துன்பத்தை அளிக்கும் விதமாகவும் அமைந்து விடுவதால் மனதில் பல்வேறு சங்கடங்கள் உண்டாகின்றன
நம் தூங்கும் பொழுது கனவு காணும் பொழுது ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளன அதேபோல் நாம் அன்றாட பயன்படுத்தும் பழ வகைகளை நாம் சாப்பிடுவதைப் போல் கனவு கண்டால் என்ன நன்மைகள் என்னென்ன தீமைகள் என்பதை பற்றி நம் முன்னோர்கள் கூறி வந்ததினை இதில் காணலாம்
அண்ணாச்சி பழம்
அண்ணாச்சி பழமானது மேலே உள்ள பகுதியில் முட்களைப் போன்று தோற்றமளிக்கும் ஆனால் அதை நீக்கிவிட்டு சாப்பிடும் பொழுது இனிப்பாக இருக்கும் இதே போல் அண்ணாச்சி பழம் சாப்பிடுவது போல் நமக்கு கனவு வந்தால் அண்ணாச்சி பழத்தை மேற்பரப்பில் உள்ள முற்களைப் போல் ஒரு சில சமயங்களில் நமக்கு கஷ்டத்தையும் அன்னாச்சி பழத்தின் உள்ளே உள்ள சுவையை போல் நமக்கு நன்மையையும் அளிக்கும்
மாம்பழம்
நாம் ஒரு சில பழங்களை பார்த்தவுடன் நாவில் எச்சில் ஊறுவதைப் போன்று காணலாம் அதே போல் மாம்பழத்தையும் நாம் பார்த்தவுடன் நாவில் எச்சி ஊறுவதை காணலாம். இந்த மாம்பழம் சாப்பிடுவதினால் அதிகமான நன்மைகள் உள்ளன. இதே போல் மாம்பழ சாப்பிடுவதைப் போல் நாம் கனவு கண்டால் நமக்கு கூடிய விரைவில் மாம்பழம் இனிப்பது போல் செல்வம் வந்து சேர போகிறது என்ற தகவல் உடனடியாக கிடைக்கும்
இஞ்சி
நாம் காய்கறிகள் ,பழங்கள், மாமிசங்கள் என பல்வேறு உணவு பொருட்களை சாப்பிடுவதினால் ஏற்படும் ஜீரண சக்திக்கு மூல ஆதாரமாக விளங்குகிறது. செரிமானத்தில் இஞ்சிக்கு நிகர் எதுவுமே இல்லை என்று கூறப்படுகிறது.அந்த அளவுக்கு இஞ்சியானது செரிமானத்தின் முதல் அடிப்படை காரணமாக விளங்குகிறது. இந்த இஞ்சியினை சாப்பிடுவது போன்று நாம் தூங்கும் பொழுது கனவு கண்டால் இஞ்சியின் மதிப்பு எப்படி உயர்ந்து இருக்கிறதோ அதேபோன்று நமக்கும் மதிப்பும் மரியாதையும் இருக்கும் என கூறப்படுகிறது
🌴 ஐஸ்கிரீம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீமை பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் எப்படி உள்ளதை போன்றும் ஐஸ்கீரிம் எப்படி மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடுகிறதோ அதே போன்று ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல் நாம் இரவில் கனவு கண்டால் மகிழ்ச்சி தரும் வகையில் மிகப்பெரிய செய்தி வரும் என நம்பிக்கை உள்ளது
நெல்லிக்காய்
சங்ககாலத்தில் நெல்லிக்காய் சாப்பிடுவதினால் தன்னுடைய ஆயூல் நீடிக்கும் என்று பல்வேறு புராணங்கள் மூலம் நாம் தெரிந்து உள்ளோம் அதே போன்று நெல்லிக்காய் சாப்பிடுவதை போல் இரவில் கனவு கண்டால் மகிழ்ச்சி செய்தி நடைபெறும் என்றும் பணம் சம்பாதிக்க வைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் மனதில் எண்ணிய நிறைவேறாத சில ஆசைகள் நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி