புராட்டாசி பௌர்ணமியினை முன்னிட்டு சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி
தேனி மதுரை விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களை இணைக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் சதுரகிரி மகாலிங்கம் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த சதுரகிரி மகாலிங்கம் திருக்கோவிலில் ஒவ்வொரு அமாவாசை பௌர்ணமி மற்றும் முக்கிய தினங்களில் ஏராளமான பக்தர்கள் மலையில் ஏறி சதுரகிரி மகாலிங்கத்தை தரிசனம் செய்து வருவது வழக்கம். இதே போல் புரட்டாசி மாதத்தின் பவுர்ணமியை முன்னிட்டும் புரட்டாசி மாவட்டத்தின்பிரதோஷத்த முன்னிட்டும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
மேலும் சதுரகிரி மகாலிங்கம் திருக்கோவிலானது மிக அதிக தொலைவில் உள்ளதால் வனத்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சென்று வருவதற்கு அனுமதி அளித்துள்ளது
மேலும் இந்த திருக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் எளிதில் பற்றக்கூடிய பொருட்கள் எதையும் எடுத்து வரக்கூடாது என்றும் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் 'பத்து வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி இல்லை என்றும் மலைப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் குளிக்க கூடாது என்றும் இரவு நேரங்களில் தங்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அனுமதி அளிக்கப்பட்ட நாட்களில் அதிகமாக மழை இருந்தால் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி