முருகனை இப்படி வழிபாடு செய்தால் திருமண தடை நீங்கும்
மனித வாழ்வில் பிறந்த குழந்தை முதல் வயதானவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பொறுப்புகளும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. குழந்தை, பள்ளி படிப்பு /கல்லூரி படிப்பு ,வேலை, திருமணம் பெற்றோர் /தாத்தா பாட்டி /என்று அடுத்தடுத்து ஒவ்வொரு நிகழ்வாக நடந்து காலங்கள் மாறிக்கொண்டே இருந்த நிலையில் அனைத்து கால கட்டங்களிலும் நிகழ்வுகள் தானாவே அமையும் .
ஆனால் திருமணம் என்று கருதப்படும் மனதனின் முக்கிய நிகழ்ச்சியானது பல்வேறு தடங்கல்கள் வந்து அமையும் நிகழ்வாக இருந்து வருகிறது. ஒரு சிலருக்கு உடனடியாக திருமணம் நடைபெறுகிறது ஆனால் ஒரு சிலருக்கு காலங்காலமாக பல்வேறு முயற்சிகள் எடுத்த பிறகுதான் திருமணம் நடைபெறுகிறது. இப்படி திருமண வாழ்க்கையில் ஏகப்பட்ட கஷ்டங்கள் இருக்கும் நிலையில் திருமணம் ஆகாமல் உள்ள நபர்கள் முருகன் கோவிலுக்கு சென்று எவ்வாறு வழிபட்டால் நமக்கு திருமணம் ஆகும் என்பதை பற்றி இதில் காணலாம்
திருமணம் ஆகாமல் உள்ள நபர்கள் வள்ளி தெய்வானை சமதே ,முருக பெருமான் ஆகிய தெய்வங்களை வணங்கலாம் திருமண தடையை நீக்குவதற்கு செவ்வாய்க்கிழமை அன்று இரவு நேரத்தில் நாம் குடியிருக்கும் வீட்டின் அருகே எந்த முருகன் கோவில் உள்ளதோ அந்தக் கோவிலின் வடமேற்கு மூலையில் இரவு தங்க வேண்டும் மறுநாள் காலை எழுந்தவுடன் குளித்துவிட்டு அருகம்புல் மாலை பூசாரியிடம் கொடுத்து விநாயகப் பெருமானுக்கு சாற்றி அவரை வழிபாடு செய்ய வேண்டும்.
முன்னோர் காலத்தில் முருகனின் திருமணத்திற்கு விநாயகர் பல்வேறு உதவிகளை செய்துள்ளார் அதேபோல் விநாயகப் பெருமாள் உங்களுக்கும் விரைவில் திருமணம் நடப்பதற்கு வழிவகை செய்வார் இதன் அடிப்படையிலே விநாயக பெருமாளை முதலில் வணங்க வேண்டும். மேலும் முருக பெருமானுக்கு அபிஷேக பொருட்கள் வாங்கி கொடுத்து இரண்டு நெய் தீபம் ஏற்றி விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று எண்ணி தரிசனம் செய்ய வேண்டும். இவ்வாறு பூஜை செய்தால் திருமணம் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் முருகன் கோவிலுக்கு ஆணாக இருந்தால் இரவு நேரத்தில் அவர் மட்டும் தங்கி வழிபாடு செய்ய வேண்டும் .பெண்ணாக இருந்தால் பாதுகாப்புக்கு பெற்றோர் துணைக்கு செல்லலாம். திருமணம் நடைபெறமால் இருக்கும் நபர்கள் முருக பெருமானை வழிபட்டு பலன் அடையலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி