ஆறு கிருத்தாதா சுவாமியும், பெதமங்கராஜு வம்சத்தினாரின் வரலாறும்
பாவையதாதாவின் தோற்றம்
நாடும் வீடும் நலம் பெறவும் சிறப்பான முறையில் வாழ்ந்து வந்த ஆறுகிறுத்த சாமி எவ்வாரு உருவானது . ஆறுகிறுத்த சாமிக்கு இன்று வரை எவ்வாறு அவருடைய தலை முறை மக்கள் தரிசணம் செய்து வழிபட்டு வருவதினை பற்றியும் மாலை தாண்டும் விழா எவ்வாறு நடைபெற்றது என்பதனை பற்றியும் இந்த கட்டுரையில் நாம் காணலாம்

பாவையதாத்தாவுக்கு ஆறு மகன்களும் ஒரு மகளும் இருந்து வந்துள்ளனர். மேலும் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்ததால் ஆறு மகன்களும் ஒரு மகளும் மிகச் சிறப்பான முறையில் வளர்க்கப்பட்டனர் . மேலும் அனைவரும் வீரம், அறிவு , மற்றம் அனைவற்றிலும் சிறந்து விளங்கினார்கள்.இதே போல் ஒரே மகளுக்கு அதிக செல்லமும் வீரத்தையும் சொல்லிகொடுத்து வெளியில் செல்லாதவாறு வீட்டில் வைத்து வளர்த்து வந்துள்ளனர்.
உங்கள் திருக்கோவில்களின் வரலாறும், உங்கள் கிராமங்களின் பெயர் காரணங்கள் வரலாறும் வீடியோ மற்றும் கட்டுரை அடிப்படையில் இடம்பெற 8012911442 என்ற தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்
மேலும் அந்த மகளுக்கு பங்கு.பாவமா என்று பெயரிட்டு அனைத்து வசதிகளும் செய்து வளர்த்து வந்த நிலையில் ஆறு மகன்களுக்கும் திருமணம் ஆகியது
மேலும் பாவையா தாதாவின் ஒரே மகளுக்கும் வயது வந்த நிலையில் வெளியே செல்லாமால் இருந்து வந்த நிலையில் . ஒரு நாள் பாவையா தாதாவின் 6 மகன்களின் மனைவிகளும் பங்கு பாவம்மாளை ஒரு நாள் வீட்டிக்கு அருகில் உள்ள தெலுங்கில் கூறும் நீல நிய்யி எனப்படும் கிணற்றுக்கு அழைத்து சென்றுள்ளனர் .மேலும் இந்த பங்கு பாவம்மா வெளி உலகமும் வெளி பார்வையும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் முதன் முதலாக வீட்டை விட்டு வெளியில் வந்தவுடன் கிணற்றில் தெரிந்த சூரியனை பார்த்து உள்ளார் .இந்த சூரியனை அதிசயத்துடன் பார்த்த பங்கு பாவமா உடனடியாக தனது அண்ணன்களின் மனைவிகளிடம் இது என்ன என்று கேட்டுள்ளார் அதற்கு இது சூரியன் என்றும் உன்னுடைய கணவர் என்று பேச்சுவழக்கில் சொல்லி இருக்கிறார்கள்.
தனது அண்ணன் மனைவிகள் கூறிய சொல்லின்படி சூரியனையே தனது கணவராக நினைத்து வந்த நிலையில் பங்கு பாவமாவுக்கு கர்ப்பம் தரித்து மகன் பிறந்துள்ளார்.
மேலும் புராணங்களில் கர்ணன் பிறந்ததினைபோல் பங்கு பாவாம்மாளுக்கும் அணைத்து சக்திகளும் கூடிய கடவளின் அவதாரமாக மகன் பிறந்த நிலையில் அந்தப்பகுதியில் உள்ளமக்கள்அனைவரும்
கணவர் இல்லாமல் குழந்தை பிறந்ததினை பாவாயாதாத்தாவிடம் கேட்டுள்ளனர். இதனை அறிந்த பாவாய தாத்தா கடவுளின் அவதாரமாக மகன் பிறந்துள்ளார் என்று கூறி பொதுமக்களின் மனதில் குறையில்லாமல் இருப்பதற்காக இரும்பினால் செய்யப்பட்ட குதிரைமீதுஅமர்ந்துள்ளார் அதனை தொடர்ந்து மிகப்பெரியபள்ளத்தில் தீப்பிழம்பு கொழுத்தி எரிந்து கொண்டிருந்த பள்ளத்தில் குதிரைமீது அமர்ந்த வாறு தீம்பிளம்பிள் பாவய தாத இறங்கி உள்ளார்.
இந்த நேரத்தில் பள்ளத்தில் தீப்பிளம்பாகஎரிந்து கொண்டதில் இரும்புக் குதிரையுடன் இறங்கிய போது திடீரென இரும்பு குதிரை உயிர் பெற்றது மேலும் உயிர் பெற்ற குதிரை பறக்கத் தொடங்கியுடன் பாவயத்தாத்தையும் குதிரையில் அமர்ந்தபடி பறந்துள்ளார் அப்பொழுது ஒரே மகளான பங்கு பாவம்மாள் தனக்கு மகன் பிறந்துள்ளார் என்றும் அதற்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் .அதற்க்கு பாவாயதாத தனது மகள் பங்கு பாவம்மாளிடம் உனது மகனுக்கு சூரியனை போல் அதிக சக்தியும் அதிக தைரியமும் நல்ல குணங்கள் அணைத்தும் உள்ளதால் சூரியன் என்றால் மிகப்பெரிய சக்தி என்று கூறுவதினைப் போல் பெதமங்கராஜா என்று பெயரிட்டும் பெதமங்கராஜாவுக்கு சுட்டம் பட்டமாக கதலிசாமி ஆகியோரும் உடன் இருப்பார்கள் என்றும் குஜ்ஜு பொம்மு வகையார்கள் பொம்மை சாமி உட்பட குலதெய்வம் முதல் அனைத்து சாஸ்திர சமுதாயங்களும் உங்களுக்கும் பொருந்தும் என்றும் கூறி சென்றுள்ளார்.
பெதமங்கராஜு மிக சிறப்பான முறையில் அனைத்து சக்திகளுடன் வளர்ந்து விளங்கி வாழ்ந்து வந்த நிலையில் அவர்களுக்கு திருமணம் முடிந்து ஐந்து மகன்கள் பிறந்துள்ளார் .மிகச் சிறப்பான முறையில் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அனைத்து உதவிகளையும், பொண்ணும் பொருளும் வழங்கியும் செல்வ செழிப்புடன் வழங்கி வந்த நிலையில் அஞ்சு மகன்களும் மிகச் சிறப்பான முறையில் வளர்க்கப்பட்டனர் மேலும் ஐந்து மகன்கள் உடன் யங்ஞ சேனை ரிசி கோத்திரம் முழ பந்து அப்பனூர்வார்ளு வம்சம் வழியினை சார்ந்த அல்லசானி பெந்தன்னா வகையாறுகளில் ஒருவரும் ஐந்து மகன்கள் உடன் அரண்மணையில் வாழ்ந்து வந்துள்ளார் .
இப்படி ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த ஆறு நண்பர்களில் ஒரு சமயம் அப்பகுதியினை ஆண்ட மன்னர்களுக்கும் இவர்களுக்கும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் இருந்த நிலையில் பெதமங்கராஜுலின் 5 மகன்களை சிறையில் அடைத்தனர். இந்த செய்தியினை அறிந்த யங்ஞ சேனை ரிசி கோத்திரம் முழ பந்து அப்பனூர்வார்ளு வம்சம் வழியினை சார்ந்த அல்லசானி பெந்தன்னாவின் இல்லத்தில் விசேசம் நடைபெறும் நேரத்தில் உடனடியாக தனது 5 நண்பர்களை மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த சிறைக்கு சென்று வாழைப்பழத்துக்குள் அறத்தை வைத்து அந்த ஐந்து நபர்களிடம் கொடுத்துள்ளார் வாழைப்பழத்தில் அறம் இருந்ததிளை பார்த்த ஐந்து மகன்களும் உடனடியாக சிறையில் கம்பிகளை அறுத்துவிட்டு வெளியேறி விட்டனர். தொடர்ந்து அங்கிருந்து பல கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் தென்பகுதியான தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி என்னும் பகுதி அருகில் வந்து வாழ்ந்து வந்தனர் ஐந்து மகன்கள் மற்றும் ஆறாவதாக இருந்த நண்பர் பெத்தனாவும் இணைந்து பெற்றோர்களுக்கு அங்கு மிகப் பெரிய கோவிலினை கட்டி தரிசனம் செய்து வந்துள்ளனர்.அதன் அடிப்படையில் இந்த ஆறுகிறுத்த சுவாமியின் திருக்கோவில் அமைந்துள்ளது திருக்கோவில் உள்ளே பாவாயதாதா , பங்கு பாவம்மாள், பெதமங்கா ராஜு ஆகியோர் அமைந்துள்ள சாமி பீடங்களும் உள்ளன. அந்த திருக்கோவில் வெளியே பாதுகாப்பது போல் பெதமங்கராஜுவின் ஐந்து மகன்களும் அவர்களுடன் நண்பனாக விளங்கிய யங்ஞ சேனை ரிசி கோத்திரம் முழ பந்து அப்பனூர்வார்ளு வம்சம் வழியினை சார்ந்த அல்லசானி பெந்தன்னா சிலையும் அமைந்துள்ளது முதன் முதலில் ஐந்து மகன்கள் உடன் ஆறாதாக இணைந்த யங்ஞ சேனை ரிசி கோத்திரம் முழ பந்து அப்பனூர்வார்ளு வம்சம் வழியினை சார்ந்த அல்லசானி பெந்தன்னா ஆகியோரை சேர்த்து ஆறு கிறுத்த சாமி என்று பெயரிட்டு இன்றுவரை பெதமங்கராஜா மற்றும் யங்ஞ சேனை ரிசி கோத்திரம் முழ பந்து அப்பனூர்வார்ளு வம்சம் வழியினை சார்ந்த அல்லசானி பெந்தன்னா ஆகியோர் இணைந்து இன்றுவரை வழிபாடு செய்து வந்துள்ளனர். இதன் அடிப்படையில் தற்பொழுது மாலை தாண்டும் விழாவும் நடைபெற்று வருகிறது
பெதமங்கராஜு எப்படி உருவாகினார் , என்பதினை பற்றி நாம் அனைவரும் மேற்காணும் கட்டுரையில் படித்தோம் இந்நிலையில் 2023ஆம் வருடம்
செப்டம்பர் மாதம் நடைபெற்ற இந்த குலதெய்வத்தின் திருவிழாவினை படித்துக்கொண்டே திருவிழாவின் விளக்கங்களை காணலாம்
மாலை தாண்டும் விழாவில் மிக முக்கிய நிகழ்வாக முதலில் கம்பம் நடும் நிகழ்ச்சியும் கெடுவைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது இந்த நிகழ்வின் முக்கிய நிகழ்வாக திருவிழாவிற்கு முன் குஜ்ஜு பொம்மு வம்சத்தினருக்கு முதல் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது .அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கெடுவைத்தவுடன் தினசரி கும்மி ஆட்டங்களும் தேவராட்டங்களும் ஆடி பாடி மகிழ்ந்து வந்த நிலையில் திருவிழாவுக்கு முதல் நாளில் பொம்மிநாயக்கன்பட்டியில் உள்ள சுவாமி வீட்டிலிருந்து திருக்கோவிலுக்கு வில்வ கூடை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊர் பெரியவர்களை அழைக்கும் முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது அன்று முதல் நான் இரவில் ஆண்கள் எல்லாரும் தேவராட்டங்களும் , சேவையாட்டங்களும் தேவதும்தி முழங்க ஆடியா நிலையில் பெண்கள் எல்லாரும் சுவாமி பாடல்களை பாடி கொண்டே கும்மி ஆட்டங்கள் ஆடினார்கள் .மேலும் தங்கள் வீடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட கொழுக்கட்டை எனப்படும் வில்வ கூடைகளை கொண்டு வந்து தேவர் மொக்கு எனப்படும் குலத்தெய்வ கும்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது
இரண்டாம் நாள் நிகழ்சியாக செங்கரும்புகளாலும் பூமாலைகளாலும் வட்டமாக அமைக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்யப்பட்டது .மேலும் முக்கத்து முக்கோடி தேவர்களின் மந்திரங்களையும் கூறியபடி நாட்டு மாடு சாணத்தால் மொழுகப்பட்டு ரங்கம் எனப்படும் சாஸ்திர சம்பிராயங்கள் நடைபெற்றன .கம்பளி நாயக்கர்கள் ஊர் பட்டக்காரர்கள் ஊர் நாட்டாமைகள் கோடியார் வகையாளர்கள் மந்தை நாயக்கர்கள் பூசாரிகள் என ஏராளமானோர் பங்கு பெற்ற இந்த மாலை தாண்டும் நிகழ்ச்சி யின் முக்கிய நிகழ்வாக திண்டுக்கல் கரூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து சலிகெருது 5 மந்தைகளில் இருந்து 70 நாட்டுசாமி மாடுகள் கொண்டுவந்த நபர்களுக்கும் சாமி மாடுகளுக்கும் உருமி மேலத்துடன் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது .
தங்களது தெய்வமாக வழங்கும் காளை மாடுகளுக்கும் சிறப்பான வரவேற்பு முடிந்தவுடன் சிறப்பான அபிஷேகம் நடத்தப்பட்டு மாலை தாண்டும் எருது விடும் நிகழ்ச்சி நடைபெற்றது
சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் கொத்து கொம்பு எனப்படும் எல்லை கொம்பு தேவராட்டங்களுடன் சுவாமி அருள் பெற்று நடும் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அந்த எல்லை கொம்பு உள்ள இடத்துக்கு அனைத்து மாடுகளையும் அழைத்துச் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த காளை மாடுகளை அனைத்தையும் அழைத்துச் சென்ற பின்பு உருபி மேலத்துடன் கோவில் வளாகத்தில் இருந்து வில்வக் கூடை கொண்டு வரும் நிகழ்ச்சியும் எல்லையை தாண்டும் மாடுகளுக்கு வெற்றி பெற்று வரும் காளை களை எண்ணற்ற மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ,சிறு குழந்தைகள் மூலம் வரவேற்பு அளிப்பதற்காக மஞ்சள் பொடி எலுமிச்சம்பழம் அடங்கிய தொகுப்பு கொண்டு வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் அனைத்து காளைகளையும் கொண்டு சென்ற பின்பு மாலை தாண்டும் விழாவுக்காக ஏற்பாடுகள் செய்யப்படும் வரும் நிலையில்
மூங்கில் தோரணத்துடன் மாடுகளை வரவேற்கும் விதமாக வேப்பமில்லை எலுமிச்சம் பழம் கரும்பு அடங்கிய தோரணங்கள் கற்றி தோரணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காளைகளை மாலை தாண்டும் ஓட்டம் விடப்படும் நேரத்தில் பொறா கிரக தண்ணீர் கொண்டு வரும் நிகழ்ச்சியும் நடைபெறும் இந்த பொறா கிரக தண்ணீர் எடுத்து வரும் நபர்கள் தனது சம்பந்தக்காரருடன் அவர்கள் மீது கம்பிலியால் போர்த்தி முகம் தெரியாத அளவுக்கு பாதுகாப்புடன் பொறகிரக தண்ணீர் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த பொறகிரக தண்ணீர் கொண்டு செல்லும் நபர் இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் தெரிந்தவுடன் மீண்டும் திரும்பி மூங்கில் தோரண இருக்கும் இடத்துக்கு கொண்டு வர வேண்டும் அந்த காளை மாடுகள் அருகில் வருவதற்குள் ஓட்டத்துடன் வரும் மாடுகளை பார்த்தவுடன் தோரணம் உள்ள இடத்துக்கு கொண்டு வந்து அந்த தண்ணீரை மூங்கில் தோரணம் இருக்கும் இடத்தில் கொட்டி விட்டு தனியாக சென்று விட வேண்டும் மேலும் அவர் அந்த மாடுகளை பார்க்கக் கூடாது அந்த தண்ணீர் சிந்தியவுடன் அந்த காளை மாடுகளுக்கு தண்ணீர் கொட்டிய இடத்திற்கு ஒரு விதமான தெய்வ பக்தியுடன் இந்த தோரணத்துக்கு ஓடிவரும் நிகழ்ச்சி நடைபெறும் இந்த தெய்வ பக்தியுடன் ஓடி வரும் காளைகள் முதலில் வரும் காளைக்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் அனைவரும் வரவேற்கும் விதமாக வீரத்தின் அடையாளமாகவும், வீரர்களை வரவேற்கும் விதமாகவும் மஞ்சள் பொடி எலுமிச்சம்பழம் கொண்டு தூவி வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இ

மேலும் பல்லையம் வைத்து தரிசனம் செய்த கொழுக்கட்டைகளை சிறப்பு பூஜைசெய்து வழிபடும் சமயத்தில் பல நாட்கள் விரதம் இருந்து விரதத்தை முடிப்பதற்காக தேவர் மொக்கு எனப்படும் விரதத்தை முடிக்கும் தரிசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது ஆணும் பெண்ணும் வரிசையாக நின்று தனது குலதெய்வங்களை வேண்டி நாடும் வீடும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று மலையும் தண்ணீரும் ஆங்காங்கே இருக்க வேண்டும் என்று கூறியும் மனதில் நினைத்துக்கொண்டு தனது தெய்வங்களை வணங்கியபடி பூமியினை நோக்கிவணங்கியும் தனது தெய்வங்களை வணங்கியும் தெய்வ வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளைகோயில் பூசாரி தம்பிநாயக்கன்பட்டி காமையராஜ் நாயக்கர் பெதமங்கராஜு பங்காளிகள் யங்ஞ சேனை ரிசி கோத்திரம் முழ பந்து அப்பனூர்வார்ளு வம்சம் வழியினை சார்ந்த அல்லசானி பெந்தன்னா பங்காளிகள் ஆகியோர் செய்திருந்தனர்
திண்டுக்கல் மாவட்டத்தில்
எழவனம் பட்டி கோட்டைப்பட்டி டி புதூர் என்டப்புளி , காமாட்சிபுரம் பழனிபுதுக்கோட்டை பெருமாள்கோவில்பட்டி, மற்றும் சில கிராமங்களிலும்
துத்துக்குடி மாவட்டத்திலும்
குருமலைபுதூர் எத்தலப்பநாயக்கன்பட்டி ,சொரக்காப் பட்டி எட்டையாபுரம் , மற்றும் சில கிராமங்களிலும் , விருதுநகர் மாவட்டத்தில் அனுப்புங்குளம் எனும் கிராமத்திலும் வாழ்ந்து வருகின்றனர்
யங்ஞ சேனை ரிசி கோத்திரம் முழ பந்து அப்பனூர்வார்ளு வம்சம் வழியினை சார்ந்த அல்லசானி பெந்தன்னா பங்காளிகள் தேனி மதுரை கோயம்புத்தூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்
மேலும் உங்கள் குலந்தெய்வங்களின் தோற்றத்தின் வரலாறு மற்றும் உங்கள் ஊரின் வரலாறு உங்களுடைய சந்ததியினர்களுக்கும் , பொதுமக்களும் தெரிந்து கொள்ள கூகுள் மூலம் அணைவரிடமும் சென்றடையவும் , பொக்கிசமாக பாதுகாத்திடவும் தொடர் கொள்ளலாம்
மேலே உள்ள தகவல்கள் அனைத்தும் பெ தமங்கராஜு பங்காளிகள் அளித்த தகவலாகும்
திருக்கோவில்களின் வரலாறும், உங்கள் கிராமங்களின் பெயர் காரணங்கள் வரலாறும் வீடியோ மற்றும் கட்டுரை அடிப்படையில் இடம்பெற 8012911442 என்ற தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி