முருங்கை மரம் வளர்த்தால் வெறும் கையோடுதான் போவான் பழமொழியின் உண்மை விளக்கம்
நம் வீட்டின் முன் தென்னை மரம் கொய்யா மரம் ,எலுமிச்சை மரம் என எண்ணற்ற மரங்கள் வளர்ப்பதற்கு நம் முன்னோர்கள் முதல் தற்பொழுது வரை குடியிருக்கும் மக்கள் ஆசைப்படுவார்கள். ஆனால் முருங்கை மரத்தை மட்டும் வளர்ப்பதற்கு யோசனை செய்வார்கள். தென்னை மரத்தில் சில நன்மைகளும் உள்ளது போல் ஒவ்வொரு மரத்திலும் சில நன்மைகள் உள்ளன ஆனால் முருங்கை மரத்தில் மட்டும் எண்ணற்ற நன்மைகள் உள்ளது இப்படி எண்ணற்ற நன்மைகள் இருந்தும் முருங்கை மரத்தை மட்டும் எதற்காக நம் வீட்டு முன்பாக நடுவதற்கு தயங்குகிறார்கள் என்றும் முருங்கை வளர்த்தவன் வெறும் கையோடு தான் போவான் என்ற பழமொழியின் உண்மை விளக்கத்தையும் இந்த கட்டுரை மூலம் காணலாம்
கண்கள் பாதுகாப்புக்கும் உடலின் வலிமைக்கும் எலும்புகள் வலிமைக்கும் உடல் தோற்றம் நன்றாக இருப்பதற்கும் என அனைத்து நன்மைகளும் உடையது நம் முருங்கை மரம். முருங்கைக்கீரைகள் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் கால்சியம் சத்துக்கள் மற்றும் கண்களுக்கு பயன்படும் அனைத்து சக்திகளையும் தருகின்றன அதேபோல் முருங்கை பூக்களும் அதிக அளவு சத்துக்கள் உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக விரும்பி சாப்பிடலாம் .முருங்கைக்காயும் மனிதனின் உறுதிதன்மையை விளக்கும் வகையில் முருங்கைக்காய் விளங்குகிறது இப்படி சிறப்பு வாய்ந்த முருங்கைமரத்தின் கிளைகள் அனைத்தும் உயரமாக வளர்ந்தாலும் கூட சக்தி குறைவாக மரங்களாக திகழ்கிறது இந்த மரங்களில் நம் குழந்தைகள் மேலே ஏறிவிட்டால் கீழே விழுந்து விடுவார்கள் என்பதன் காரணத்தைகொண்டும் அந்த மரங்களில் கம்பளிப் பூச்சிகள் அதிக அளவு இருப்பதினால் தோல் சம்பந்தமான நோய்கள் அதிக அளவு தாக்கப்படும் என்பதாலும் முருங்கை மரத்தினை நம் முன்னோர்கள் முதல் தற்பொழுது வரை வீட்டின் முன்பாக நடவு செய்வதற்கு தயங்குகிறார்கள்
அதேபோல் சிறு வயது முதல் முருங்கை கீரை காய்கள் பூக்கள் என அனைத்தையும் உணவாக பயன்படுத்தி வரும் நபர்களுக்கு வயதானவுடன் அதே கம்பீர தோற்றமும் உடலின் வலிமையும் இருந்து கொண்டே இருக்கும் இதனால் மற்றவர்களின் துணை இல்லாமலும் அதிக வயது வந்தவுடன் கம்பு போன்ற பொருட்களை பிடிக்காமல் தனியாக நடந்து செல்லலாம் .ஆனால் முருங்கை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உணவாக பயன்படுத்தாமல் சக்தி குறைந்தவர்கள் 50 வயதுக்கு மேல் கம்பு உள்ளிட்ட மற்றொரு துணைப் பொருட்கள் மூலம் நடந்து செல்கின்றனர்முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களில் இருந்து கிடைக்கும் உணவு பொருட்களை பயன்படுத்தும் போதுஅதிக வயது ஏற்பட்டவுடன் யாருடைய துணிகள் இல்லாமல் கம்பீரமாக நடந்து செல்லலாம்
இவ்வாறு முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களை அதிக அளவு பயன்படுத்தி வரும் நபர்கள் வயது முடிந்தவுடன் தானாகவே யாருடைய துணை இல்லாமல் கம்பீரமாக நடந்து செல்லலாம் என்று கூறிய வார்த்தைகளின்படிமுருங்கை மரம் வளத்தவன் வெறுங்கையோடு தான் போவன் என்ற பழமொழி உருவாகி உள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி