தேனி தொழிற்பயிற்சி நிலையத்தில் முதலாம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கான வரவேற்பு விழா நடைபெற்றது
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் முதலாம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கான நோக்கு நிலை வகுப்பு நிறைவு விழா நடைபெற்றது,தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் சேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பயிற்சி அலுவலர் லட்சுமணன், சிவக்குஞ்சு ஆகியோர் முன்னிலை வகித்தனர் .மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நிலைய மேலாண்மை குழு தலைவர் அரவிந்த், தேனி துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், மாலா எர்த் மூவர்ஸ் கண்ணன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றி மாணவர்களை வாழ்த்தி பேசினார்கள்.
மேலும் மேலாண்மை குழு தலைவர் அரவிந்த் சிறப்புரையாற்றும் பொழுது அரசினர் தொழில் பயிற்சி மையத்திணை தமிழகத்தில் முதன்மை பயிற்சிமாக மாற்றுவதற்கு அனைத்து வேலைகளும் செய்யப்படும் என்றும், மாணவர்கள் அனைத்து பயிற்சிகளும் மேற்கொண்டு மிகச் சிறப்பான முறையில் வேலைகளில் சேருவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.மேலும் தேனி காவல் துணை கண்காணிப்பாளர் சிறப்புரையாற்றும் பொழுது மாணவர்கள் கல்வி விளையாட்டு போன்ற துறைகளில் சாதித்து காட்ட வேண்டும் என்றும் மேலும் பல்வேறு புதிதாக கண்டுபிடிப்புகளை மாணவர்கள் செய்து வெற்றிவாகை சூடவேண்டும் என்றும் கூறினார்
.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பினை மருது பாண்டியன் நிகழ்த்திய இந்த நிகழ்ச்சியில் பயிற்சி அலுவலர் வீரஜக்கு வரவேற்புரை நிகழ்த்தினார் . உதவி பயிற்சி அலுவலர் உடையாளி பங்கேற்று நன்றி உரையாற்றிய இந்த நிகழ்ச்சியில் ஏற்புரையை செல்வன் பெரியார் மணி ,செல்வி மோகன் ஈஸ்வரி ஆகியோர் நிகழ்த்தினர்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் தொழில் பயிற்சி மையத்தின் ஆசிரியர்கள் அலுவலர்கள் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி