விவசாயிகளுக்கு வேளாண்மை துறை சார்பில் வழங்கப்படும் ரூபாய் 3 லட்சம் ஊக்கத்தொகையை பெற எவ்வாறு விண்ணப்பம் அளிப்பது
மத்திய மாநில அரசு சார்பில் விவசாயிகள் விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இதேபோல் தமிழக அரசின் வேளாண்மை துறை சார்பில் இயற்கை வழியில் நெல் உட்பட விதை வங்கியை பராமரிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக ரூபாய் 3 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின்படி எவ்வாறு விவசாயிகள் ரூ 3 லட்சம் பெற முடியும் என்பதனை பற்றி இதில் காணலாம்
இந்தத் திட்டத்தில் சேர வேண்டும் என்று நினைக்கும் விவசாயிகள் தங்கள் விவசாயி பணிகளில் இரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையான மரபில் நெல் ரகங்களை உற்பத்தி செய்து பராமரிக்க வேண்டும் மேலும் தங்கள் தோட்டங்களில் பாரம்பரிய முறைப்படி நெல் சாகுபடி செய்திருக்க வேண்டும்
மேலும் இந்தத் திட்டத்திற்காக விண்ணப்பிக்கவிரும்பும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உழவன் செயலி மூலம் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.மேலும் அக்ரிஸ்நெட் என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் .மேலும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டுமானால் குறைந்தபட்சம் விவசாயிகள் 100 பாரம்பரிய நெல் ரகங்களை நெல் விதை பணிகளில் ஈடுபட்டு பராமரிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் மறு உற்பத்தி செய்ய வேண்டும்.
பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரையிலும், விவசாயிகள் முதல் பொதுமக்கள் வரை காட்சிபடுத்தி விழிப்புணர்வினை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பங்கேற்று ஆய்வு செய்து விவசாயிகளை தேர்வு செய்து மாநில தேர்வுக்கு அனுப்பி வைப்பார்கள் . மாநில தேர்வில் தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு ரூ 3 லட்சம் வழங்கப்படும்
இந்த திட்டம் குறித்து விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவங்களை தங்கள் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிப் பெற்றுக்கொண்டு விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி