பி எம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு உதவி தொகையினை ரூ 8 ஆயிரமாக உயர்த்தும் மத்திய அரசு
விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய மாநில சார்பில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது
மேலும் மத்திய அரசு சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக ரூபாய் 6000 உதவி தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தினை பாரத பிரதமர் மோடி கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். 2018 ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் ஆயிரம் முதல் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஏற்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் ரூபாய் 2000 வீதம் ஆண்டுக்கு மூன்று முறை பயனாளிகளின் வங்கி கணக்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டு வந்த நிலையில் இந்தத் திட்டத்தின் மூலம் 11 கோடிக்கும் மேல் விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இதுவரை 14 தவணையாக ரூ2.42 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது .மேலும் 2023 2024-ம் ஆம் ஆண்டின்நிதி ஆண்டுக்கு மத்திய பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்காக ரூபாய் 60,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் மேலும் சிறுகுறு விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் வகையில் ரூபாய் 6000 வழங்கிய உதவிதொகையினை 8000 ரூபாயக உயர்த்த மத்திய அரசு தற்பொழுது ஆலோசனை நிகழ்த்தி வருகிறது .
மேலும் இந்த திட்டத்தில் மேலும் பயனாளிகள் பயன்பெறும் வகையில் ஏற்கனவே உள்ள தகுதியினை தளர்வது செய்வது குறித்தும் ஆலோசனை நிகழ்த்தப்பட்டு வருகிறது .இந்த திட்டத்தின் மூலம் மேலும் தகுதிகள் தளர்வு ஏற்பட்டால் மேலும் விவசாயிகளின் எண்ணிக்கை கூடும் என்பதால் இது குறித்து மத்திய அரசு சார்பில் ஆலோசனை நிகழ்த்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவித்தொகையாக ரூ6000 வழங்கப்பட்ட நிலையில் தற்போது ரூ 8000 வழங்க ஆலோசனை நடைபெற்று வருவதால் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தி வருகிறது.
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி