தேனியில் APJ அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது
தேனி NRT நகரில் உள்ள தேனி கிராண்ட்மாஸ்டர் செஸ் அகாடமி வாளகத்தில் முன்னாள் ஜனாதிபதியும் அனுசக்கி விஞ்ஞானியுமான டாக்டர் APJ அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர் அப்புதுல்கலாம் அவர்களின் புகழை போற்றும் வகையில் தேனி கிராண்ட்மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் 48வது மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியினை திமுகவின் தேனி நகர செயலாளரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினாருமாகிய கவுன்சிலர் நாரயான பாண்டியன் பங்கேற்று டாக்டார் அப்துல்கலாமின் திருவுருவ படத்திற்கு மரியாதை செய்து சதுரங்க போட்டியினை தொடங்கிவைத்தார் .
ஓய்வு பெற்ற தேனி பாரஸ்ட் ரேஞ்சர் உமனுல்லாதலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் சதுரங்க அகாடமியின் பொருளாளர் கனேஸ்குமார் முன்னிலை வகித்தார். மேலும் இந்த போட்டிகள் வயது அடிப்படையில் மூன்று பிரிவுகளாக நடைபெற்றது .
10 வயதுவரை ஒருபிரிவாகவும் 11வயது முதல் 14வயதுவரை ஒரு பிரிவாகவும், பொதுப் பிரிவு என்று மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. மேலும் இந்த போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு வெற்றி கோப்பைகளும், பாராட்டு சான்றிதழ்கள் , பதக்கங்கள் வழங்கப்பட்டன்.
இந்த போட்டியில் மொத்தம் .மாணவர்கள் 122பங்கேற்றனர். மேலும் மாவட்ட அளவிலான இந்த போட்டியின் நடுவர்களாக ஆசிரியர் மேனகா , சதுரங்க அகாடமியின் இயக்குனர் அஜ்மால்கான் ஆகியோர் செயல்பட்டனர்.
அகாடமி தலைவர் S.S சையது மைதீன் வரவேற்புரை நிகழ்த்திய இந்த போட்டியில் வெற்றி பெற்ற முதல் 2 நபர்கள் தேசிய போட்டுக்கு தேர்வு செய்யப்பட்டனார். மேலும் இந்த மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் சதுரங்க மாணவர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சதுரங்க நடுவர்கள் பங்கேற்றனர்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி