Type Here to Get Search Results !

மாணவர்கள் பிரதமரின் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்

மாணவர்கள் பிரதமரின் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்


 

மாணவர்கள் கல்வி ,வேலை வாய்ப்பு , மற்றும் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் பெற்றிட மத்திய மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது .இந்நிலையில் மாணவர்கள் படிக்கும் காலத்தில் மேலும் மேல் வகுப்புகளில் சிறப்பாக பயிழும நோக்கத்திற்காக கல்வி உதவி தொகை திட்டம் மத்திய மாநில அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்பொழுது பிரதமர் கல்வி உதவி தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.


இந்த உதவி தொகை பெறுவதற்கு நுழைவு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என மத்திய  அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காலம் பற்றாக்குறை காரணமாக நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டு தற்பொழுது உதவித்தொகை பெறுவதற்காக வரன்முறை செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த கல்வித் தொகை பெறுவதற்கு இதர பிற்படுத்தப்பட்டோர் ,பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ,சீர் மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு 11ஆம் வகுப்பு பயின்று 3093 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் இந்த உதவி தொகை பெறுவதற்கு எட்டாம் வகுப்பு ,பத்தாம் வகுப்பு தேர்வுகளில் 60% மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவி தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் இந்த ஆண்டு கல்வித் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் இந்த உதவி தொகை திட்டம் குறித்து மேலும் விபரங்கள் அறிய மத்திய அரசின்  சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளம் முகவரிக்கு சென்று பார்த்து பயன்பெறலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.