ரேஷன் கார்டு இருக்கா டிச 31 தேதி கடைசி வாய்ப்பு
தமிழகத்தின் ரேஷன் அட்டைகள் வைத்திருக்கும் நபர்கள் அனைவரும் தங்களுடைய பெயர்களை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரேஷன் கார்டு ஆதார் இணைப்பு செய்யாவிட்டால் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாநில அரசு சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக பொது மக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு தமிழகத்தில் அரிசி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இலவசமாகவும், எண்ணெய் சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது .மேலும் ரேஷன் பொருட்கள் வாங்கும் அனைத்து நபர்களுக்கும் சரியான முறையில் பொருட்கள் சென்றடைய வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் அனைத்து பொருட்களும் அணைவருக்கும் வழங்க வேண்டும் என்றும், தவறான முறையில் ரேசன் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையிலும் தமிழக அரசு சார்பில் பல்வேறு செயல்பாடுகளை செயல்படுத்தப்பட்டு வருகிறது .
மேலும் இவ்வாறு ரேசன் பொருட்கள் தவறாக முறையில் பயன்படுத்தி வருவதனை தவிர்க்கும் விதமாக குடும்ப அட்டை உள்ள அனைவரின் பெயர்களை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது .கடந்த செப்டம்பர் மாதம் வரை முடிவடைந்த நிலையில் தற்போது தமிழக அரசு சார்பில் மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது -அதாவது குடும்ப அட்டையில் உள்ள அனைத்து நபர்களும் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்றும், இதனால் அனைவருக்கும் சரியான முறையில் ரேஷன் பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் ,இவ்வாறு ரேஷன் கார்டில் உள்ள அனைவரும் ஆதார் எண்ணை இனைகாமல் இருந்தால் ரேஷன் பொருட்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு குறைவு என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது ஆகவே ரேஷன் கார்டுடன் ekyc இணைப்பினை அனைவரும் கட்டாயமாக இணைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்த நிலையில் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அனைவரும் இணைக்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து நபர்களும் தங்களுடைய ekyc உடனடியாக இணைக்க வேண்டும் என்றும் இது சம்பந்தமாக உங்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று விரிவான முறையில் விளக்கங்கள் கேட்டு ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி