பள்ளி மாணவர்களுக்கு இளம் கவிஞர் விருது தமிழக அரசின் அசத்தல்
மத்திய மாநில அரசு சார்பில் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது மேலும் பள்ளி மாணவர்களுக்காக கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகளும் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றனர் . இந்நிலையில் மகாகவி பாரதியின் நினைவு தினத்தை முன்னிட்டு 2022 - 2023 கல்வி ஆண்டில் மாணவர்களின் கல்வி மற்றும் கவிதை திறனை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பள்ளி கல்வித்துறையின் இயக்குனர் அறிவொளி வெளியிட்டு உள்ள அறிக்கையினால் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பில் மகாகவி பாரதியின் நினைவு தினத்தினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த படைப்புகளை உருவாக்கும் மாணவர்களுக்கு இளம் கவிஞர் விருதும் , பரிசுகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
போட்டியில் எந்த மாணவர்கள் கலந்துகொள்ளலாம்
அரசு பள்ளிகளில் 10 , 11 ,12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதலில் ஒன்றிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு அந்த போட்டியின் மூலம் 3 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள்
அதனை தொடர்ந்து மாவட்ட அளவில் நவ-23 ந் தேதி போட்டிகள் நடத்தப்பட்டு அதில் சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அதனை தொடர்ந்து நவ- 30 தேதி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு கலந்துகொள்ள அனுப்பி வைக்கப்படும்,
மாநில நடைபெறும் இந்த போட்டியில் சிறந்த படைப்பாற்றலை உருவாக்கும் ஒரு மாணவர் ஒரு மாணவியர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறந்த இளம் கவிஞர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
மாணவர்களே நீங்களும் இளம் கவிஞர் விருது பெற முயற்சி செய்துபயன் அடையாலம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி