அரையாண்டு தேர்வு மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாள்
தமிழக முழுவதும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு
டிசம்பர் 7ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்க உள்ளது. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை அரையாண்டு தேர்வு சம்பந்தமாக அனுப்பப்பட்டுள்ளது அந்த அறிவிப்பின் படி தமிழகம் முழுவதும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் அரையாண்டு தேர்வு ஆனது ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து தேர்வுகளும் ஒரே வினாத்தாளாக இருக்கும் என்றும் ,வெளியிடப்பட்டுள்ளது
மேலும் அரையாண்டு தேர்வுக்காக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் இருவகை வினாத்தாள்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி முதல் 21ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது என்றும் ,பிளஸ் ஒன் பிளஸ் டூ மாணவர்களுக்கு டிசம்பர் 7 முதல் 22ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது என்றும் ,இந்த அட்டவணையினை பயன் படுத்தி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ,தேர்வுக்கு முன்பாக பாதுகாப்புடன் வினாத்தாள்கள் ஆன்லைன் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு பதிவிறக்கம் செய்து தேர்வு நாளில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் ,அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி