Type Here to Get Search Results !

நிலத்தில் நீரோட்டம் உள்ளதா முன்னோர்கள் பார்த்த ரகசியங்கள்

 நிலத்தில் நீரோட்டம் உள்ளதா முன்னோர்கள் பார்த்த ரகசியங்கள்


விவசாயம் செய்வதற்கு மிக முக்கிய மூலப்பொருளாக கருதப்படுது தண்ணீர் .இந்த தண்ணீரானது நிலத்துக்கு அடியில் உள்ளது. இந்த தண்ணீரை எவ்வாறு பூமிக்கு அடியில் உள்ளது என்பதனை  முன்னோர்கள் எப்படி  பார்த்தார்கள் என்பதனை காணலாம்

 


நாம் தற்பொழுது நீரோட்டம் பார்ப்பதற்காக தேங்காய், வாட்ச் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் மூலம் பார்த்து வருகின்றனர். ஆனால் நம் முன்னோர்கள் பல்வேறு இயற்கையின் வழியாக நீரோட்டம் பார்த்து வந்தனர் .அந்த ரகசியங்களை இந்த கட்டுரையில் நாம் காணலாம்



நம்முடைய முன்னோர்கள் ஒரு நிலத்தை தேர்வு செய்வதற்கு முன்பாக அந்த இடம் விவசாயம் செய்வதற்குரிய நிலமாக இருக்கிறதா இல்லையா என்ற என்பதனை அறிந்து அந்த இடத்தினை தேர்வு செய்வார்கள். அவ்வாறு ஒரு நிலத்தை வாங்குவதற்கு முன்பாக நம் முன்னோர்கள் ஐந்து நாட்களுக்கு முன்பாக அந்த இடத்துக்கு சென்று விடுவார்கள் .அப்பொழுது அவர்களுடன் கால்நடைகள் ஆகியவற்றையும் அந்த இடத்துக்கு அழைத்துச் செல்வார்கள்

மேலும் நிலத்தை வாங்கும் இடத்தை சுற்றி முதலில் வேலியினை அடைத்து அந்த வேலி பகுதிக்குள் மாட்டையும் சேவலையும் விட்டு விடுவார்கள் .

சேவல் மூலம் கண்டறிதல்



சேவல் தினசரி அந்தப் பகுதியில் மேய்ந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டிருக்கும் குடிசையில்  வந்து தங்கிக் கொள்ளும் .அப்படி தினசரி சேவல் அப்பகுதியில் மேய்ந்து கொண்டு அதிகாலையில் எழுந்தவுடன் கூவும். இப்படி தினசரி சேவல்கள் அந்த நிலத்தில் மேய்ந்து கொண்டு அதிகாலையில் கூவினால் அந்த இடமானது தண்ணீர் உள்ள இடமாக கருதப்படுகிறது. அதாவது ஒரு நிலத்துக்கு அத்தியாவசியமாக விளங்கும் தண்ணீர் இருக்கும் இடத்தில் மண்புழுக்கள் மற்றும் மண்வளத்தை பெருக்கும் புழுக்கள் அதிகமாக இருக்கும் என்றும், அந்தப் புழுக்களை இந்த சேவலானது  உணவாக பயன்படுத்திக் கொள்ளும் என்றும், இந்த புழுக்களை சாப்பிட்டவுடன் தினசரி அதிகாலையில் உற்சாகத்துடன் சேவல் கூவும் என்றும் நம் முன்னோர்கள் அப்பொழுதே கண்டுபிடித்து வைத்துள்ளனர் .இதனால் மண்வளத்தை அதிகமாக்கும் புழுக்கள் அந்த நிலத்தில் அதிகமாக இருந்தால் சேவல் அதனை உணவாக பயன்படுத்தி அதிகாலையில் கூவும் என்றும் ,இதனால் அந்த இடத்தில் தண்ணீர் அளவு உள்ளது என்றும் நம் முன்னோர்கள் அன்றே கண்டுபிடித்து வைத்துள்ளனர்

கால்நடைகள்


விவசாயத்தோடு நம் முன்னோர்கள் கால்நடைகளையும் அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளனர் .விவசாயம் செய்வதில் நஷ்டம் ஏற்பட்டாலும் கால்நடைகள் மூலம் லாபம்  வந்த நிலையில் நம் முன்னோர்கள் ஒரு இடத்தை தேர்வு செய்வதற்கு முன்பாக கால்நடைகளையும் அந்த இடத்துக்கு அழைத்துச் சென்றனர். மேலும் நிலம் வாங்குவதற்குரிய தோட்டத்தை சுற்றி வேலிகள் அமைத்து மாடுகளை உள்ளே விட்டு விடுவார்கள். மேலும் அந்த மாடுகள் அந்தத் தோட்டத்தில் உள்ளபசுந்தீவனங்களை உணவாக பயன்படுத்தி அங்கேயே வாழ்ந்து வரும் அப்பொழுது தினசரி இந்த மாதிரி மாடுகளை அந்த வேலிக்குள் உள்ளே விட்டுவிட்டால் அதிகாலை முதல் உணவாக அந்த பசுந்தீவன்களை பயன்படுத்தி வெயில் வரும் நேரத்தில் மட்டும் அந்த பசு மாடுகள் அந்த  நிலத்தில் ஒரே இடத்தில் போய் படித்துக் கொள்ளும். இப்படி தினசரி ஒவ்வொரு நாளும் காலையில் பசு தீவணங்களை உணவாக  பயன்படுத்தியும் அதனைத் தொடர்ந்து வெயில் வரும் நேரத்தில் ஒரே இடத்தில் படுத்துக் கொள்ளும். இப்படி தினசரி ஒரே இடத்தில் படுத்துக்கொள்ளும் இடத்தில் அங்கு சென்று தோன்டினாள் கண்டிப்பாக நீரோட்டம் அதிகமாக உள்ளது என்பதை நம் முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளனர் .ஏனென்றால்  வெயில் காலத்தில் பசு ஒரே இடத்தில் தினசரி படுத்து வந்தால் அந்த இடத்தில் குளிர்ச்சியாக இருக்கும் என்றும் , அந்த இடத்தில்  நீரோட்டம் உள்ளதால் குளிர்ச்சி ஏற்பட்டு குழுமையாக இருக்கும் என்பதால் அந்த இடத்தில் மட்டும் பசு படுத்து வந்துள்ளது என்பதனை கண்டுபிடித்துள்ளனர்


புற்று கரையான்கள்



நம் முன்னோர்கள் மற்றொரு முறையில் ஒரு  இடத்தில் நீரோட்டம் உள்ளது என்பதனை பார்த்து உள்ளார்கள் .அதாவது காட்டில் அனைத்து பகுதிகளிலும் நீரோட்டம் உள்ளதா என்பதை பார்க்க முடியாமல் நம் முன்னோர்கள் கரையான்கள் நிறைந்த புற்றுக்கள் உள்ள பகுதிகளை ஆராய்ந்து பார்த்துள்ளனர். அப்பொழுது புற்றுக்கள் இருக்கும் இடத்தில் நீரோட்டம் இருப்பதை பார்த்து உள்ளனர். அதாவது கரையான்கள் அனைத்தும் ஈரப்பசை   உள்ள பகுதிகள்தான் புற்றுக்களை கட்டி வரும் 'அந்த வகையில் அந்த புற்றுக்களை சுற்றி கண்டிப்பாக தண்ணீர் உள்ளது என்பதனை நம் முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளனர்

அத்திமரம்


நமது தோட்டங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் அத்திமரம் அதிகமாக இருக்கும் இடத்தில் தண்ணீரில் நீரோட்டம் அதிகமாக இருக்கும் என்றும் கண்டுபிடித்துள்ளனர்

நாவல் மரம் 


நாவல் மரங்கள் இருக்கும் இடத்தில் சுற்றி நாவல் மரங்களின் வேர்கள் தண்ணீரை உருந்து வைத்துக்கொண்டு சேமித்து வைத்துக் கொள்ளும் தன்மை உடையது இதனால் அந்த இடங்களில் அதிகமாக தண்ணீர் இருக்கும் என்று நம் முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்துள்ளனர்

நவதானியங்கள் 


நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் நவதானியங்கள் ஆங்காங்கே சிதறி விடும் இடத்தினை சுற்றி அந்த நவதானியங்களை எறும்புகள் ஒரே இடத்தில் சேர்த்து வைக்கும் அந்த இடத்தில் ஈரப்பசை இருந்தால் மட்டுமே சேமித்து வைக்கும் இதனால் அந்த இடத்தில் தண்ணீர் அதிகமாக இருக்கும் என்றும் நம் முன்னோர்கள் அன்றே கணித்து வைத்துள்ளனர்

தற்பொழுது உள்ள காலச்சூழ்நிலையில் விவசாயிகள் முதல் பொதுமக்கள் வரை பூமிக்கடியில் நீர் இருப்பதை பல்வேறு செயற்கை கருவிகள் மூலம் கண்டுபிடித்து வருகின்றனர் .

ஆனால் நம்முடைய முன்னோர்கள் இயற்கை வழியில் பூமிக்கு அடியில் தண்ணீர் இருப்பதினை கண்டுபிடித்து இயற்கை வளத்தையும் காத்துவந்துள்ளனார்



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.