சதுரகிரி கோவிலுக்கு செல்ல நான்கு நாட்கள் தடை
மதுரை தேனி விருதுநகர் ஆகிய மாவட்டங்களை இணைக்கும் மேற்கு தொடர்ச்சியில் விருதுநகர் அருகே அமைந்துள்ளது சதுரகிரி மலை.மேலும் கடல் மட்டத்திலிருந்து ஐந்துஆயிரம் அடி உயரத்தில் இந்த சதுரகிரி மலையில் மகாலிங்கம் திருக்கோவில் அமைந்துள்ளது.
மேலும் இந்த திருக்கோவிலுக்கு அமாவாசை பௌர்ணமி மற்றும் முக்கிய தினங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது
இதே போல் அமாவாசை பௌர்ணமி தினங்களில் நான்கு நாட்கள் மட்டும் பக்தர்கள் வழிபாட்டில் சென்று வர அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சதுரகிரி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது.இதனால் மார்கழி மாதத்தின் பிரதோஷம் பௌர்ணமி பூஜைக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்றும்
தற்பொழுது மழை பெய்து வரும் நிலையில் நான்கு நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் வனத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி