நாளை 1-2-2024 இந்தப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் எண்ணற்ற திருக்கோவில்கள் உள்ளன.மேலும் காஞ்சிபுரம் நகரில் கச்சபேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.இந்த திருக்கோவிலில் 1 - 2 - 2024 வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரையில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேக விழா நடைபெறும் நேரத்தில் பள்ளி மாணவர்கள் செல்வதற்கு போக்குவரத்து இடைஞ்சல் இருக்கும் காரணத்தால் இந்த திருக்கோவிலுக்கு அருகில் உள்ள 11 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
1.எஸ். எஸ் கேவி பள்ளி
2.அரசு சுப்புராய முதலியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
3.அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி
4. அந்திரசன் பள்ளி
5.பச்சையப்பன் ஆடவர் மேல்நிலைப்பள்ளி
6. ஸ்ரீநாராயண குரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
7.இ எஸ் ஐ நடுநிலைப்பள்ளி
8.ராயல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
9. எஸ். எஸ். கேவி பள்ளிகளுக்கு சொந்தமான இரண்டு கல்வி நிறுவனங்கள்
10 ஓபி குளம்மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
11. அரசு சுப்பராயர் முதலியார் தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி