Type Here to Get Search Results !

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய விமான படையில் வேலைவாய்ப்பு

 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய விமான படையில் வேலைவாய்ப்பு


இந்திய விமான படையில்  புதிதாக ஆட்களை தேர்வு செய்வதற்காக அக்னி வீரர் வாயு திட்டத்தின் கீழ் தற்போது ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது

அக்னி வீரர் வாயு  திட்டத்திற்கு கீழ் தேர்வு செய்யப்படும் விமானப்படை பணிகளுக்கு திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி


மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று கணிதம் , அறிவியல் , ஆங்கிலம் தேர்ச்சி இந்த படிப்பில் 50 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்,

அல்லது மத்திய மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்வி நிலையத்தில் பொறியியல் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்  ,ஆட்டோமொபைல் கம்ப்யூட்டர் சயின்ஸ் ,இன்பர்மேசன் டெக்னாலஜி ,இன்ஸ்ட்ரூமென்டேசன் டெக்னாலஜி, ஆகிய பாடப்பிரிவுகளில்,மூன்று வருட டிப்ளமோ படிப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.

விண்ணப்பம் அளிக்கும் முக்கிய நாட்கள்

17-1-2024 முதல் 6 -2 - 2024 வரை

மாத ஊதியம்

முதல் வருடத்தில் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை ஊதியமாக வழங்கப்படும் என்றும் ,நான்கு ஆண்டுகள் முடிந்தவுடன் வட்டி இல்லாமல் ரூபாய் 10 .04லட்சம் வரை வழங்கப்படும் என்றும் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ,உடல் தகுதி தேர்வு,தழுவல் இயல்பு தேர்வு - (ஒன்று )தகவல் இயல்பு தேர்வு (இரண்டு ) மருத்துவ பரிசோதனை ஆகிய தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை அக்னி வீரர் வாயு  திட்டத்தில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி உள்ள நபர்கள் கீழ்காணும் இணையதளம் முகவரிக்கு சென்று இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.


மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் வயது வரம்பு ,இதர கல்வி தகுதிகள், ஊதிய விகிதம் உட்பட அனைத்து சந்தேகங்களுக்கும் கீழ்காணும் இணையதளம் முகவரிக்கு சென்று பார்த்து பயன்பெறலாம்

https://agnipathvayu.cdac.in/AV/


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.