முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஆங்காங்கே கனமழையும், சாரல் மலையும் பெய்து வருகிறது.அதேபோல் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புயலால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் தூத்துக்குடி மற்றும் மாவட்டங்களிலும் கடும் வெள்ளம் ஏற்பட்டது.
இதுபோல் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழையும் ஆங்காங்கே சாரல் மழையும் பெய்து வருகிறது. மேலும் முல்லை பெரியாறு பகுதிகளிலும், வைகை நீர் பிடிப்பு பகுதிகளிலும் ,கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் வைகை அணையின் முழு கொள்ளளவான 71 அடி எட்டி உள்ளது.
மேலும் தற்பொழுது நீர்வரத்து வைகை அணைக்கு 3100 கனஅடியாக இருந்து வரும் நிலையில்அந்த நீரினை அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
தற்பொழுது வரும் 3100 கன அடி நீரிணை வைகை அணையில் பெரிய மதகுகள் மூலம் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது.
தற்பொழுது வைகை அணையின் நீர்மட்டம் அதன் கொள்ளளவு எட்டியதாலும் நீர் திறந்து விடப்பட்டதாலும் தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
மேலும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் தேதி அன்று முழு கொள்ளளவு எட்டிய நிலையில் தற்போது ஆறாம் தேதியே வைகை அணியின் நீர்மட்டம் கொள்ளளவு எட்டியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தற்பொழுது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தேனி திண்டுக்கல் சிவகங்கை மதுரை ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் ஆற்றங்கரையில் இறங்குவோ குளிக்கவோ கூடாது என்றும் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி