கால்நடை சுய வேலைவாய்ப்பு பயிற்சிக்கு ஜனவரி 24 க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
மத்திய மாநில அரசு சார்பில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கியும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியும் வருகிறது . படித்தும் மற்றும் படிக்காத பொதுமக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு வேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்கி அவர்களை தொழில் முனைவோராக ஏற்பாடு செய்வதற்கும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது .இதன் அடிப்படையில் தேனி அருகே வீரபாண்டி பகுதியில் உள்ள கால்நடை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கறவை மாட்டுப் பண்ணையும், வெள்ளாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
மேலும் இந்த பயிற்சி குறித்து தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
தேனி கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம் சார்பில் எழுத படிக்கத் தெரிந்த நபர்களுக்கு தொழில் முனைவோராக மாற்றும் வகையில் மாட்டுபண்ணை, வெள்ளாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் 30 நாட்கள் வழங்கப்படும் என்றும்,
இந்த பயிற்சியை முடித்தவர்களுக்கு அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் ,இந்த பயிற்சியில் சேர விரும்பும் நபர்கள் தங்களுடைய ஆதார் கார்டு, கல்வி சான்றிதழ் ,போட்டோ இரண்டு, ஜாதி சான்றிதழ் ,ஆகியவற்றுடன் பயிற்சி மேற்கொள்ளும் விதமாக ரூபாய் 3000 க்கான வங்கி வரைவோலை ஆகியவற்றுடன்
பேராசிரியர் ,துணைத் தலைவர், கால்நடை விரிவாக்கத்துறை தேனி, காணொளி மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம் வீரபாண்டி 6 2 55 3 4 என்ற முகவரிக்கு வருகின்ற ஜனவரி 24ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் சந்தேகங்களை கேட்டு அறிய 86674 28982என்ற எண்ணின் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை கேட்டு அறிந்து பயனடையலாம் என்றும் இந்த பயிற்சியில் பொதுமக்கள் பங்கு கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி