ஜனவரி 12ம் தேதி ரேஷன் கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு
தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகை வழங்குவதற்காக ஜனவரி மாதம் 12ம் தேதி அன்று நியாய விலை கடைகள் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் பொங்கல் பண்டிகையில் விவசாயிகளைப் போற்றும் வகையில் சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு 7ந் தேதி முதல் 9ந்தேதி வரை பொங்கல் பரிசு தொகை பெறுவதற்கான டோக்கன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொங்கல் பரிசு தொகை இந்த வருடம் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை,முழு கரும்புடன் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
பொங்கள் பரிசு தொகுப்பு அனைவருக்கும் சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜனவரி மாதம் 7தேதி முதல் டோக்கன் வழங்கப்படுகிறது அந்த டோக்கன் வழங்கப்படும் நேரத்தில் அந்தந்த குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய பொங்கல் பரிசு தொகுப்பினை 10ம் தேதி முதல் 13ந்தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்றும் பொங்கல் பரிசு தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்கள் சுலபமாக பெற்றுக் கொள்ளும் வகையில் 12 ந்தேதி நியாயவிலைக் கடைகள் அனைத்தும் செயல்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதேபோல் அதற்கு மாற்றாக மற்றொரு நாள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி