பி எம் கிசான் திட்டத்தில் இணைய ஜனவரி 15 வரை விவசாயிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு
மத்திய அரசு சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தங்கள் இடுப்பொருட்களை வாங்குவதற்காகவும் மற்ற விவசாய பணிகளை மேற்கொள்வதற்காகவும் வருடத்திற்கு ரூ.6000 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது .மேலும் இந்த 6000 ஆயிரம் ரூபாய் ஆனது மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இ கே ஒய் சி (e Kyc) பதிவேற்றம் செய்யாத விவசாயிகளுக்கு தற்பொழுது அந்த ஆறாயிரம் ரூபாய் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் பி எம் கிசான் திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகளை இணைப்பதற்காக பல்வேறு இடங்களில் தற்பொழுது சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதே போல் சேலம் மாவட்டத்திலும் தற்போது இ கே ஒய் சி பதிவேற்ற செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது .
.2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 வரை நடைபெற உள்ள இந்த சிறப்பு முகாமில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் பங்கேற்று பதிவு செய்து இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் ,மேலும் விவசாயிகள் அனைவரும் பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ரூபாய் 6000 பெற்றுள்ள அனைத்து விவசாயிகளும் கண்டிப்பாக இ கே ஒய் சி பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் ,தங்களுடைய தவணைத் தொகையை பெற இ கே. ஒ சி பதிவேற்றம் மற்றும் ஆதார் எண்ணை வங்கி சேமிப்பு கணக்குடன் இணைப்பது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிஎம் கிசான் திட்டத்தில் இதுவரை பயன் பெறாத தகுதி உள்ள விவசாயிகள் புதியதாக பதிவு செய்ய வேளாண்மை துறை மூலம் கிராம அளவிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் ,இந்த முகாமானது 15 1 2024 வரை அந்தந்த கிராம நிர்வாக அலுவலகம் ,வட்டார வேளாண்மை அலுவலகம் மற்றும் தோட்டக்கலை அலுவலகங்களில் பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம் என்றும் விவசாயிகள் உதவி மேலாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களை அணுகி சந்தேகங்களை கேட்டறிந்து இதுவரை பதிவு செய்யாத தகுதி உள்ள விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம் மற்றும் பி எம் கிசான் திட்டத்தில் பயன் பெற பி.எம் கிசான் முகச் செயலியின் கண்சிமிட்டால் மூலம் எளிமையாக பதிவு செய்யலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றும் ,மேலும் அடுத்த தவணை திட்டத்தினை பெற இ கே ஒ சி பதிவு செய்து தொடர்ந்து இதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி