Type Here to Get Search Results !

பிப்ரவரி 2.2024 உள்ளூர் விடுமுறை அரசு அறிவிப்பு

பிப்ரவரி 2.2024  உள்ளூர் விடுமுறை அரசு அறிவிப்பு


மத்திய மாநில அரசு சார்பில் முக்கிய தலைவர்கள் பிறந்த நாள் மற்றும் பல்வேறு திருவிழாக்களுக்கு பொதுமக்கள் கொண்டாடும் வகையில் அரசு விடுமுறை விடப்பட்டு வருகிறது அதே போல் அந்தந்த உள்ளூர் மாவட்டத்தில் முக்கிய திருவிழாக்கள் இருந்தால் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதிருப்புக் கொளியூர் என்னும் அவிநாசியில் பெருங்கருணை நாயகி உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் இருந்து வருகிறார்


இந்த திருக்கோவிலில் கடந்த 14 வருடங்களுக்கு முன்பாக கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் அந்த திருக்கோவிலை புனரமைத்து தற்பொழுது கும்பாபிஷேக வேலைகள் நடைபெற்று வருகின்றன . இந்நிலையில் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி (2024)வெள்ளிக்கிழமை அன்று இந்த திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது இதனால் இந்த பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 7 25 மணிக்கு மேல் 9 மணிக்கு மேல் நடைபெற உள்ளதால்

திருப்பூர் மாவட்டத்தில் இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பிப்ரவரி இரண்டாம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என்றும் அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படும் என்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 3ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக இருக்கும் என்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.