4000 உதவி பேராசிரியர் பணிக்கு ஜுனில் தேர்வு 1776 இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஏப்ரலில் தேர்வு
தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டு பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்பப்பட்டு வருகின்றன .இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் இந்த ஆண்டு தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது .மேலும் பல வருடங்கள் இடைநிலை ஆசிரியர் பணியாளர்களுக்கான நியமனம் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்பொழுது ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 1766 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 4000 உதவி பேராசிரியர் பணிகளுக்கு வருகின்ற ஜூன் மாதம் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேபோல் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு டெக் தேர்வு தாள் ஒன்று தாள் இரண்டு ஆகிய தேர்வுகள் ஜூலை மாதத்தில் நடைபெறும் என்றும் ,முதுகலை ஆசிரியர்கள் பணியில் 200 பணியிடங்களுக்கு தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று ஆசிரியர் மற்றும் கல்வியியல் பயிற்சி நிறுவனங்களில் பேராசிரியர் பணியிடங்களுக்கு 139 காலி பணிகளுக்கு டிசம்பர் மாதம் தேர்வு நடைபெறும் என்றும் அரசு சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிகளுக்கு 56 காலி பணியிடங்களுக்கு பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் இந்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிடப்பட்டுள்ளது .தற்பொழுது ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தேர்வினால் புதிதாக வேலைக்கு சேர விரும்பும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நமது வாட்ஸ் அப் குரூப்பில் இணைய
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி