ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி
மத்திய மாநில அரசு சார்பில் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்பொழுது ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் கல்வி உதவித் தொகையை எவ்வாறு பெற வேண்டும் என்பதனை இதில் காணலாம்
மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ,சீர்மரபினர் உள்ளிட்ட பிரிவுகளில் சேர்ந்த பெண்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழக அரசு சார்பில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய தகுதிகள் உள்ள மாணவர்கள் தேசிய மயமாக்கப்பட்டவங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் தங்களுடைய பெயரில் சேமிப்பு கணக்கை தொடங்கும், அந்த வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும், ஆதார் எண், வங்கி கணக்கு, ஜாதி சான்றிதழ் போன்றவற்றை தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் தலைமை ஆசிரியர் மாணவர்களின் விவரங்களை ஐஎம்எஸ் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் , இது குறித்து மேலும் விளக்கங்களைப் பெற அவர் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி