1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு
பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்வி விளையாட்டு மற்றும் கலை இலக்கியம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்காக பல்வேறு செயல் திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்பொழுது பள்ளி கல்வித்துறை சார்பில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் பண்பாட்டை வளர்க்கும் விதமாக அனைத்து அரசு பள்ளிகளிலும் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இதுபோல் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒருங்கிணைந்த பள்ளி -கல்வி கல்வி சாரா செயல்பாடுகள் அரசு பள்ளிகளில் தொடக்க நிலையில் பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம் 2023 2024 ஆம் ஆண்டில் நடத்துவது தொடர்பாக தற்பொழுது வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன
பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம்
தமிழக அரசு சார்பில் உள்ள அனைத்து தொடக்க உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கலாச்சாரம் மற்றும் விளையாட்டு வாரம் நடத்தப்பட உள்ளது என்றும் இந்த போட்டிகள் பள்ளி அளவிலான போட்டிகள் வட்டார அளவிலான போட்டிகள் மதிப்பிடுதல், மாவட்ட அளவிலான போட்டிகள் மதிப்பிடுதல் ,மாநில அளவிலான போட்டிகள் மதிப்பிடுதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வரைதல் ,வண்ணம் தீட்டுதல்,கதை சொல்லுதல் மாறுபட போட்டி கைவினை பொருட்கள் தயாரித்தல்,பாட்டு போட்டி பேச்சுப்போட்டி பாரம்பரிய நடன போட்டி மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
விரிவான தகவல்களைப் பெற
மேலும் இந்த போட்டிகள் எந்த தேதியில் நடைபெறும் என்பதை குறித்தும் என்னென்ன போட்டிகள் நடைபெறுகிறது என்பதை குறித்தும் மற்றும் பல்வேறு விளக்கங்களை ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பினை முழுமையான தகவலை பெற கீழ்காணும் பிடிஎப் வடிவில் உள்ள இணையதளம் முகவரிக்கு சென்று பார்த்து பயன்பெறலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி