Type Here to Get Search Results !

இளம் விஞ்ஞானியாக விருப்பமா 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு

இளம் விஞ்ஞானியாக விருப்பமா 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு 



மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது அதேபோல் மாணவர்கள் இடையில் நிற்காமல் தொடர்ச்சியாக உயர்கல்வி வரை படிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளையும் மானியங்களையும் அறிவித்து வரும் நிலையில் கல்லூரி படிப்பை படிப்பதற்காக மத்திய மாநில அரசு சார்பில் கல்வி உதவித்தொகை மற்றும் வங்கி கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது


இந்நிலையில் பள்ளி மாணவர்கள் இளம் விஞ்ஞானியாக உருவாக்கும் விதமாக பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு பயிற்சிகளை மாணவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது

  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதாவது இஸ்ரோ எனப்படும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கான இளம் விஞ்ஞானிகள் திட்டம் என்ற சிறப்பு திட்டத்தினை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தத் திட்டத்தில் குறிப்பாக இந்தியாவில் கிராமப்புறத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக இளம் மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் ,விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவை வழங்குவதற்காக இளம் விஞ்ஞானிகள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது .மேலும் இந்த திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இரண்டு வார கால வகுப்பு வரை பயிற்சி பரிசோதனைகளின் செயல்முறை விளக்கம் , கேன்சாட் ,ரோபோடிக் கிட் ,இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மாதிரி ராக்கெட் கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு வட்டம் இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் நேரடியாக சென்று பார்த்து பயிற்சி பெறலாம்.



அதேபோல் இந்தத் திட்டத்தில் இளம் விஞ்ஞானிகள் சேரும் மாணவர்கள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2019 22 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் மாணவர்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பது டன் புவியியல் இருப்பிடங்களின் அடிப்படையில் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு விண்வெளி மற்றும் பிரபஞ்சத்தின் மீது படிப்பு மற்றும் நேரடியாக பார்க்க தூண்டும் மோகம் ஆகியவை அதிகமாக உள்ளது இதனால் அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் வானம் நிகழ்வுகளை பற்றியும் ,பூமி வரலாறு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளைப் பற்றியும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்காக இளம் விஞ்ஞானிகள் திட்டம் என்ற சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .இந்த திட்டத்தில் சேருவதற்கு  தற்பொழுது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும் இதற்கான பதிவு செயல்முறை பிப்ரவரி மாதம் 20 - 2024  முதல் மார்ச் 20 - 2024 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் ,


மேலும் இந்தியாவில் ஜனவரி 1 2024 அன்று ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இஸ்ரோ இளம் விஞ்ஞானி திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் என்றும் விண்ணப்ப படிவுத்தினை சமர்ப்பிப்பதற்கு முன் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பதிவேற்றி ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை  கவனமாக மதிப்பாய்வு செய்து விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் .ஒரு முறை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பின்னர் திருத்தவோ ,மாற்றவோ முடியாது ஆகவே இந்த திட்டத்தில் சேரும் மாணவர்கள் பிப்ரவரி மாதம் இருபதாம் தேதி முதல் மார்ச் மாதம் 20ஆம் தேதி வரை கீழ்காணும் இணையதளம் முகவரிக்கு சென்று தங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

https://jigyasa.iirs.gov.in/yuvika

மாணவர்களின் பெற்றோர்களே உங்களுடைய குழந்தைகள் இளம் விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை இளம் விஞ்ஞானி திட்டத்திற்கு மேல் காணும் இணையதளம் முகவரிக்கு சென்று பதிவு செய்து இளம் விஞ்ஞானி பயிற்சியில் சேர உதவி செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.