மாட்டுக்கு ரூ17,500 கடன் உதவி வாங்குவது எப்படி
மத்திய மாநில அரசுகள் சார்பில் விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு நலத்திட்டங்களையும் பல்வேறு மானியங்களையும் அறிவித்து வருகிறது .இது போல் தமிழக அரசு சார்பில் விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இது போல் கால்நடை பராமரிப்பு துறை சார்பிலும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது .மேலும் விவசாய பொதுமக்கள் தமிழக அரசு சார்பில் வழங்கும் கடன் அட்டையினை பெற்று கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் கடன் பெற்று தங்கள் தொழில்களை அதிகப்படுத்தி கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தற்பொழுது கால்நடை பராமரிப்பு உடுமலை கோட்ட உதவி இயக்குனர் ஜெயராமன் தெரிவித்த அறிக்கையில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் கிராமங்களில் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று கால்நடை மருத்துவமனை மருத்துவரை அணுகி நீங்கள் தற்பொழுது மொத்தமாக வளர்க்கும் மாடுகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு சான்று பெற வேண்டும்,
மேலும் கடன் பெறுவதற்குரிய ஆவணங்களையும் இணைத்து வங்கியில் சமர்மிக்க வேண்டும். அதேபோல் எந்த ஒரு வங்கி கணக்கு மூலமாகவும் பராமரிப்பு கடன் பெறலாம்
ஒருவருக்கு கால்நடை வளர்ப்பில் அதிக ஈடுபாடு இருந்தால் அவர் கடன் பெறுவதற்கு அவர் வைத்துள்ள மாடுகளை பொறுத்து கடன் வழங்கப்பட்டு வருகிறது உதாரணமாக ஐந்து மாடுகள் வரை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஒரு மாட்டுக்கு ரூபாய் 14000 ,5 மாடுகளுக்கு மேல் வளர்க்கும் விவசாயிகளுக்கு ஒரு மாட்டுக்கு 17500 கடனாக வழங்கப்பட்டு வருகிறது .
இந்த விவசாய கடன் அட்டை மூலம் பெறப்படும் இந்த கடனுக்கு குறைந்த வட்டியை வசூலிக்கப்படும் என்றும் கடன் தொகையினை ஓரு ஆண்டுக்குள் விவசாயிகள் திரும்ப செலுத்த வேண்டும் என்றும் இந்த திட்டமானது தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி