Type Here to Get Search Results !

திருப்பதியில் மே மாதத்திற்கான தரிசனம் செய்ய முன்பதிவு தேதி அறிவிப்பு

 திருப்பதியில்  மே மாதத்திற்கான  தரிசனம் செய்ய  முன்பதிவு தேதி அறிவிப்பு


பாரத திருநாட்டில்  தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரியும் இடமாக திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் அதிகளவு பக்தர்கள் வருகை புரிகின்றனர் . முன்பதிவு செய்யும் சிறப்பு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் தரிசிக்க வருகை புரியும்  பக்தர்களின் வசதிக்காக மே மாத தரிசனத்திற்காக முன்பதிவு செய்யும் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி முதல் காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான கட்டணம் 300 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுப்ரபாதம் ,அர்ச்சனை ,கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவம், சிறப்பு அபிஷேகம் உட்பட பல்வேறு சிறப்பு தரிசனங்களுக்கும் கட்டண சேவைகளுக்கும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.


மேலும் பக்தர்கள் முன்பதிவு டிக்கெட்டில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ்காணும் இணையதளம் முகவரிக்கு சென்று டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

திருப்பதி தேவஸ்தானத்தில் இணையதள முகவரி

https://tirupathibalaji.ap.gov.in/

மேலும் மே மாதம் ஏழுமலையானை வழிபட ஸ்ரீ வாரி சிறப்பு  கட்டண தரிசன டிக்கெட் கோட்டோ வரும் பிப்ரவரி 24ஆம் தேதி அன்று தொடங்கும் என்றும் அன்று வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் திருப்பதி தேவஸ்தானத்தில் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்த வேண்டுமென்றும் போலி வெப்சைட்டில் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.