பொதுத்தேர்வின் போது தனியார் பள்ளி ஆசிரியர்களை கண்காணிப்பாளராக நியமிக்க கூடாது தேர்வு துறை அறிவிப்பு
தமிழக அரசின் தேர்வுத்துறை சார்பாக பொது தேர்வு பணிகளுக்காக வழிகாட்டும் நெறிமுறைகளை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வருகின்ற மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில் பிளஸ் 1 தேர்வு மார்ச் 1ஆம் தேதியும், பிளஸ் டூ தேர்வு மார்ச் 4 ந்தேதியும் ,பத்தாம் வகுப்பு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதத்தில் முடிவடைகிறது.
தற்பொழுது அரசு தேர்வு துறை சார்பில் பொதுத் தேர்வு பணிகள் குறித்து சிறப்பு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது மேலும் தமிழக முழுதும் அமைக்கப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட வினாத்தாள் ,விடைத்தாள் பாதுகாப்பு மையங்கள் சரியான அளவு வைத்திருக்க வேண்டும் என்றும், அந்தப் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என்றும் ,பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் வினாத்தாள் கசிந்தால் அதற்கு சம்பந்தமான அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் ,அதேபோல் தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையோ ,தனியார் பள்ளிகளின் முதல்வர் ,துணை முதல்வர் ஆசிரியர்களோயே முதன்மை கண்காணிப்பாளராக நியமனம் செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தேர்வு மையத்துக்கு நியமிக்கப்படும் முதன்மை கண்காணிப்பாளர் துறை அலுவலர்கள் ஒரே பள்ளியை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது என்றும் ,அறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் தினத்தன்று சம்பந்தப்பட்ட பாடத்தை போதிக்கும் ஆசிரியராக இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அறை கண்காணிப்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்தும் பல்வேறு வழிகாட்டும் நெறிமுறைகளை தற்போது பள்ளி கல்வி துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி