அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னி வீர் சேர்க்கை தொடக்கம் - 2024-2025
கோயம்புத்தூர் ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் மூலம் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 2024-25-க்கான அக்னிவீர் சேர்க்கைக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை தேனி மற்றும் தர்மபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள விண்ணப்பதாரர்கள் 22.03.2024
விண்ணப்பிக்கலாம்.
தேர்வு
ஆன்லைன் தேர்வுகள் 22.04.2024 முதல் நடைபெறும். அக்னிவீரர்களின் ஆட்சேர்ப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும். கட்டம்-1 ஆன்லைன் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு (ஆன்லைன் CEE) மற்றும் கட்டம்-||ஆட்சேர்ப்பு பேரணி.
இந்திய ராணுவத்தில் தேர்ந்தெடுக்கப்படுவது நியாயமானது மற்றும் வெளிப்படையானது. தகுதியின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும், ஆள்சேர்ப்பு முகவர்களை யாரும் நம்ப வேண்டாம் என கோயம்புத்தூர் இராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி