ஐடிஐ தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு 2024
தொழிற்பயிற்சி எனப்படும் ஐடிஐ தேர்வில் பங்கேற்க முடியாத நபர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் மாதத்தில் அகில இந்திய துணை தேர்வு நடத்தப்படும் என தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் சுந்தரவல்லி வெளியிட்ட அறிவிக்கையில்
கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் 2017 2019 ஆம் ஆண்டு தொழிற்பயிற்சி நிலையங்களில் அதாவது ஐடிஐயில் இரண்டாம் ஆண்டு தொழிற்பிரிவில் சேர்க்கப்பட்டும் அவர்களிடம் அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் பங்கேற்க இயலாத மற்றும் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு வருகின்ற மார்ச் மாதத்தில் அகில இந்திய துணைத் தேர்வு நடத்தப்படும் என்றும் இந்த பயிற்சியில் முன்னாள் பயிற்சியாளர்கள் தங்கள் படித்த நிலையங்களில் வரும் 15ஆம் தேதிக்குள் தேர்வுக்கு சம்பந்தமான பாடங்களுக்கான தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் இந்த அறிவிப்பு பற்றி மிகவும் விரிவான விளக்கங்களை பெற என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம் என்றும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி