இல்லம் தேடி கல்வி தன்னார்வளர்களுக்கு மாணவர் ஒருவருக்கு இரண்டு ரூபாய் புதிய அறிவிப்பால் மகிழ்ச்சி
கொரோனா காலகட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை விடப்பட்டது. பல மாதங்கள் விடுமுறை விடப்பட்டதால் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தினை உயர்த்தும் வகையில் அவரவர் கிராமங்களில் இல்லாம் தேடி கல்வி என்ற திட்டத்தினை தமிழக அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டது. மேலும் அந்தந்த கிராமங்களில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டார்கள்.
இந்நிலையில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவசமாக காலணி மற்றும் ஷூ வழங்கப்பட உள்ளது.
மேலும் மாணவர்களுக்கு சரியான முறையில் அணிந்திடும் வகையில்
காலணி மற்றும் ஷூ வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதனால் ஒவ்வொரு மாணவர்களையும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்கள் மூலம் கஅளக்கும் பணி நடைபெற உள்ளது.
மேலும் இந்த பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு ஒரு மாணவர்களுக்கு ரூபாய்க்கு இரண்டு ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் தன்னார்வலர்களாக இணைந்த இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி