கனவில் மயில் வந்தால் என்ன அர்த்தம்
இளைஞர்களே கனவு காணுங்கள் என்று நம்முடைய முன்னாள் குடியரசுத் தலைவர் அனுசக்தி விஞ்ஞானி அப்துல் கலாம் கூறியிருந்தார் .அவர் கூறியது கல்வி விடா முயற்சி லட்சிய குறிக்கோள் ஆகியவற்றை சென்றடைய வேண்டும் என்றால் கனவு காணுங்கள் என்று கூறியிருந்தார்.
இப்படி ஒவ்வொரு லட்சியத்திற்கும் ஒவ்வொரு கனவு இருக்க வேண்டும் என்று கூறியது போல் நம் கனவில் ஏதாவது உயிரினங்கள் வந்தால் என்ன பலன் என்ற பகுதியில் மயில் வந்தால் என்ன பலன் என்பதனை இதில் காணலாம்
மயில் நமது தேசியப் பறவையாக உள்ளதால் அந்த மயிலை பிடிப்பவர்களுக்கு சட்டப்படியான தண்டனைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது , மேலும் மயில் ஒரு இடத்தில் வசிக்கும் பொழுதும் ஓர் இடத்தில் இருக்கும் பொழுதும் பொதுவாக நம் காண்பது அரிதாக விளங்குகிறது .அதேபோல் இந்த மயில்களை பிடிப்பதும் சாதாரண விஷயமும் அல்ல
மயில் கடவுளின் பறவை என்று கூறப்படும் பொழுது மயில் உலகில் உள்ள பறவைகளிடையே மிக அழகானதாக மயில் கருதப்படுகிறது. இந்த மயில் கூர்மையான அறிவும்நேர்கொண்ட பார்வையும் உள்ளதாக கருதப்படுகிறது .இதனால் இந்த மயிலினை நாம் இரவில் கனவு காணும்பொழுது நேர்கொண்ட பார்வையாக நம் மனதில் நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கும் வேலை ,பொன் பொருள், முக்கிய இடங்கள் ஆகியவை தானாக வந்து சேரும் என்றும் கருதப்படுகிறது .எனவே மயில் நம் உறங்கும் பொழுது கனவில் வந்தால் நம் மனதில் நினைத்துக் கொண்டே இருக்கும் காரியங்கள் விரைவாக நடைபெறும் என்றும் கருதப்படுகிறது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி