பிளஸ் டூ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு
மத்திய மாநில அரசு சார்பில் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டும் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களையும் உதவிகளை செய்து வருகிறது .இந்நிலையில் பள்ளி கல்வித்துறையின் ஒருங்கிணைந்ததிட்டக் கல்வி மாநில இயக்குநரகம் சார்பில் தற்பொழுது பிளஸ் டூ மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .அதாவது பிளஸ் டூ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அது எவ்வாறு மாணவர்களுக்கு கிடைக்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சி பெரும் பிளஸ் டூ மாணவர்களுக்கு ரூபாய் 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியான நிலையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் புதிய சுற்று அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழில் கல்வி பாடப்பிரிவில் பயிலும் பிளஸ் டூ மாணவர்களுக்கு பத்து நாட்கள் அகப்பயிற்சி வழங்கப்பட உள்ளது என்றும் ,
இந்த பயிற்சியினை நிறைவு செய்யும் ஒவ்வொரு மாணவருக்கும் ரூபாய் ஆயிரம் ஊக்கத்தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த உள்ளது என்றும் மேலும் இந்த அகப்பயிற்சியினை மேற்கொள்ளும் பிளஸ் டூ மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற வேண்டும் என்றும், மாணவர்களின் வங்கி கணக்கு விபரம் மற்றும் அகப்பயிற்சிக்கு சென்ற தொழில் நிறுவனங்கள் வழங்கிய சான்றிதழ் உட்பட விவரங்களை www.tnemis.tn.schools.gov.in
என்ற இணையதளம் முகவரிக்கு சென்று பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்த விபரங்களை வட்டார வளமைய மேற்பார்வையாளர்களால் சரிதெரிக்கப்பட்டு அதன் பின் நிதியானது விடுவிக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி