Type Here to Get Search Results !

பள்ளிகள் இனி அரை நாள் மட்டுமே செயல்படும் என அறிவிப்பு

 பள்ளிகள் இனி அரை நாள் மட்டுமே செயல்படும் என அறிவிப்பு


உலகில் காலங்களின் மாற்றத்தில்  ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான சீதோசநிலை ஏற்படுத்தி வருகிறது .மழைக்காலம் குளிர் காலம் கோடை காலம் என்று குறிப்பிட்ட நாட்களில் ஒவ்வொரு காலங்களும் கடந்து செல்கின்றன. இந்நிலையில் பிப்ரவரி மாதம் முதல் ஒவ்வொரு வருடத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றன.

இதே போல் இந்த வருடமும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதினால் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் 1/2 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று தற்பொழுது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது தெலுங்கானா மாநிலத்தில் வருகின்ற மார்ச் மாதம் 15ம் தேதி முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை பள்ளிகள் அனைத்தும் 1/2நாட்கள் செயல்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் ,  1/2நாள்  மட்டும் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் அந்த அறிக்கையில் பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் இருந்து தெலுங்கானா மாநிலத்தில் வெப்பத்தின் அளவு அதிகமாக உள்ளதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 23 வரை காலை 8:30 மணி முதல் நண்பகல் 12 - 30 மணி வரை செயல்படும் என்று தெலுங்கானா மாநிலம் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்  அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும் என்றும்,

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மையங்களாக செயல்படும் பள்ளிகளில்பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் , காலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட பின் மதிய வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.