Type Here to Get Search Results !

TNPSC குரூப்-4 6244 பணியிடங்களுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் அளித்துள்ளனார்

 TNPSC குரூப்-4 6244 பணியிடங்களுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் அளித்துள்ளனார்


தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகில் உள்ள அனைவரும் கால் சம்பளம் என்றாலும் அரசு சம்பளமாக இருக்க வேண்டும் என்று எண்ணத்தில் இருந்து வந்துள்ளனர்

இதனால் இளைஞர்கள் அரசு வேலையில் சேர்வதற்காக பல்வேறு மாதிரி போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு அரசு நடத்தும் தேர்வுகளில் பங்கேற்று வருகின்றனர் .மேலும் தமிழக அரசு சார்பில் அரசு பணியிடங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்பப்பட்டு வருகிறது. இந்த காலி பணியிடங்களில் மிக முக்கியமாக கருதப்படுவது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வாகும்

இந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-4தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் இருபதாம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாளர்   ஆணையத்தில்  வெளியிடப்பட்டது

மேலும் அந்த செய்தி குறிப்பில் 108 கிராம நிர்வாக அலுவலர், உட்பட மொத்தம் 6244 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது


இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜனவரி மாதம் 30 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரை கால அவகாசம் இருந்து வந்துள்ளது .மேலும் இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தே ர்வு விண்ணப்பத்திற்காக   தேதியினை நீடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது டிஎன்பி எஸ் சி குரூப் 4 விண்ணப்பிக்கும் தேதியும் நீடிக்கப்படவில்லை

மேலும் விண்ணப்பங்ளில் உள்ள திருத்தம் மேற்கொள்வதற்காக கடைசி தேதியும் மார்ச் 6ஆம் தேதி உள்ள முடிவடைந்த நிலையில் வருகிற ஜூன் 9ஆம் தேதி அன்று தேர்வு நடைபெற உள்ளது

டி என் பி எஸ் சி குரூப் 4 அறிவித்த 6244 காலிப் பணியிடங்களுக்கு மொத்தம் 20 லட்சத்தை 37 ஆயிரத்து 94 நபர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

6244 காலி பணியிடங்களுக்கு மொத்தம் 20 லட்சத்தை 37 ஆயிரத்து 94 பேர் போட்டியிடும் நிலையில் ஒரு பணியிடத்திற்கு 326 நபர்கள் என்ற அடிப்படையில் தற்போது நிலை உருவாகியுள்ளது


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.