அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த ரூ 15 கோடி ரூபாய் ஒதிக்கீடு
பள்ளி மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசு சார்பில் பல்வேறு திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்தி வருகிறது. மேலும் மாணவர்கள் மேல் படிப்பினை படிப்பதற்காக கல்வி கடன் ,கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது.
இந்நிலையில் பள்ளி மாணவர்கள் தங்கள் தனி திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு கல்வி விளையாட்டு மட்டும் இல்லாமால் கலை இலக்கியம் மற்றும் பல்வேறு தனித் திறனை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
2025 கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கலை இலக்கிய திறனை வெளிப்படுத்தும் வகையில் கலைத் திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த கல்வி ஆண்டில் கலைத் திருவிழா நடத்த ரூ 15 கோடி ரூபாய் ஒதிக்கீடு செய்ய அரசானை வெளியிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தகுந்தாற்போல் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் கணக்கில் வரவு வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை தொடக்கப்பள்ளிகளில் வசதிக்கேற்ப பெற்றோர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினர் விருந்தினர்கள் பங்கேற்கும் வகையில் ஆண்டு விழா நடத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி